பாபங்குச ஏகாதசி 20.10.2018
If a person strictly observes Papankusha Ekadasi, hundreds of his ancestors are taken by Garuda to the spiritual world, where they attain their original, four-armed, transcendental forms.
பாபங்குச ஏகாதசி
(ஆஸ்வீன மாதம் - சுக்ல பட்ச ஏகாதசி)
அக்டோபர் மாதம் 20ம் தேதி, ஆஸ்வீன மாதம், சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை பாபங்குச ஏகாதசியாக கொண்டாடுவர். பாபங்குச ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.
யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத்மாவிடம், " ஓ மதுசூதனா, ஏகாதசி மஹாத்மியத்தில் அடுத்ததாக ஆஸ்வீன மாதத்தின் சுக்ல பட்ச ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிப்பதன் பயன், மஹிமை பற்றிய கருணை கூர்ந்து விவரமாக கூறுங்கள்." என்று வேண்டுகோள் விடுத்தார்.
பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணர் பதிலளிக்கையில்," ராஜன், பாவங்கள் அனைத்தையும் நீக்கும் ஏகாதசி விரத மஹிமையை உனக்கு சொல்கிறேன், கவனமாக கேள். ஆஸ்வீன மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி பாபங்குச ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று, அனந்தசயனத்தில் வீற்றிருக்கும் சுவாமி பத்மநாபரை விதிமுறைப்படி பூஜை செய்து வணங்க வேண்டும். அதன் மூலம், இவ்வுலக வாழ்க்கையில் வேண்டுவன எல்லாம் பெற்று சுக,போகமாக வாழ்வதுடன், மரணத்திற்குப் பின், மோட்சப்பிராப்தியையும் பெறுவர்.
ஐம்புலனையும் அடக்கி நீண்ட நெடுங்காலம் தவத்தால் பெறக்கூடிய புண்ணிய பலனை, விரத வழிமுறைப்படி ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து, கருட வாகனத்தில் சஞ்சரிக்கும் பகவான் மஹாவிஷ்ணுவை சேவிப்பதால் ஒருவர் பெறலாம். அளவிலா கடும் பாவங்களைப் புரிந்திருந்தாலும், பாவங்களை அழித்து பக்தர்களைக் காக்கும் பரம்பொருளான ஸ்ரீஹரியை வணங்குவதன் மூலம், நரகத்தின் தண்டனையிலிருந்து விடுபடலாம். இப்புவியின் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் கிடைப்பதன் புண்ணிய பலனை, பகவான் மஹாவிஷ்ணுவின் திருநாமத்தை ஜபித்தால் ஒருவர் பெறலாம். பகவானின் புனித திருநாமங்களான ராம், விஷ்ணு, ஜனார்த்தனன், கிருஷ்ணன், இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபிப்பவர், மரணத்திற்குப் பின் எமதர்மராஜன் இருப்பிடமான எமலோகத்தை காண மாட்டார். எனக்கு மிகவும் பிடித்த இந்த பாபங்குச ஏகாதசியை அனுஷ்டிக்கும் பக்தர்களும் எமலோகத்தைக் காண மாட்டார். சிவநிந்தனை செய்யும் வைஷ்ணவர்களும், மஹாவிஷ்ணுவையை நிந்திக்கும் சைவர்களும் நிச்சயம் நரகத்தை அடைவர். நூறு அஸ்வமேத யாகம் மற்றும் நூறு ராஜசூய யாகம் செய்வதால் கிட்டும் புண்ணிய பலனானது, இப்புனித ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் புண்ணிய பலனில் பதினாறில் ஒரு பங்கிற்கு சமமானதாகும்.
ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலனை விட மேலான புண்ணியம் வேறு எதுவும் கிடையாது. பாவங்களை நீக்கி மோட்சப்பிராப்தி அளிப்பதில், அனந்தசயன பத்மநாப பூஜைக்கு உகந்த நாளான பாபங்குச ஏகாதசிக்கு இணையான நாள் இம்மூவுலகிலும் இல்லை. " ஒ ராஜன், ஸ்வாமி பத்மநாபருக்கு உகந்த நாளான பாபங்குச ஏகாதசியன்று உபவாசத்துடன் விரதம் அனுஷ்டிக்கும் வரை, எப்படி பத்தினி தன் கணவனை விட்டு இணைபிரியாமல் இருக்கிறாளோ, அதே போல், பாபங்களும், முற்பிறவி பாவவினைகளின் விளைவுகளும் ஒருவரை விட்டு அகலுவதில்லை.
பாபங்குச ஏகாதசி விரத புண்ணியத்திற்கு இணை இம்மூவ்வுலகிலும் இல்லை. நம்பிக்கையுடன் விரதத்தை அனுஷ்டிப்பவர் மரணத்திற்கு பின்னர் யமதர்மராஜனை காண வேண்டிய அவசியமில்லாமல் விஷ்ணு தூதர்களால் ஸ்ரீ ஹரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். வாழ்விற்குப் பின் மோட்சப்பிராப்தி, சொர்க்கலோக வாசம், திடமான ஆரோக்கியம், அழகான பெண்கள், தனம், தான்யம் இவற்றை விரும்புவர் பாபங்குச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் விரும்பியது அனைத்தும் பெறுவர்.
"ஓ, ராஜன் !, கங்கை, கயா, காசி, புஷ்கரம், மேலான குருக்ஷேத்ரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தீர்த்தங்களில் நீராடி, பகவானை வணங்குவதால் கிட்டும் புண்ணியத்தை விட மேலான பலனை அருளும் சக்தி வாய்ந்தது பாபங்குச ஏகாதசி. ஓ மஹாராஜ் யுதிஷ்டிரா ! புவியை காப்பவரே, பகலில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு, இரவில் கண்விழித்து பகவத்நாம ஸ்மரணம், புராணம், பாகவதம் படித்தல், கீர்த்தனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இப்படி விரதத்தை பூரணமாக கடைப்பிடிப்பவர் மரணத்திற்குப் பின் விஷ்ணு லோகத்தை அடைவர். அதுமட்டுமல்லாமல், தாய், தந்தை மற்றும் மனைவி வழியின் பத்து தலைமுறை முன்னோர்களும் மோட்சப்பிராப்தியை அடைவர்.
மோட்சப்பிராப்தி பெறுவதுடன், முன்னோர்கள் அனைவரும் பூவுலக பிறப்பிற்கு முன் ரூபமான வைகுண்ட ரூபத்தை அடைகின்றனர். மஞ்சள் பட்டாடையில், அழகிய ஆபரணத்துடன், நான்கு திருக்கரங்கள் கொண்டு கருட வாகனத்தில் ஸ்ரீ ஹரியின் இருப்பிடமான வைகுண்டத்திற்குச் செல்வர். இது பாபங்குச ஏகாதசியை நன்முறையில் அனுஷ்டிப்பதால் பக்தர்களுக்கு கிட்டும் பலனாகும். ஒ அரசர்களில் தலைசிறந்தவரே!, குழந்தை, இளைஞர் அல்லது முதிய வயதினர், யாராக இருந்தாலும், பாபங்குச ஏகாதசி விரதத்தை மேற்கொள்வதால் அவர்களின் சகல பாபங்களும் நீங்கி, மறுபிறவி என்னும் சக்கரத்திலிருந்து விடுதலை பெறுவர். அன்று உபவாசம் இருப்பது மிகவும் சிறப்பானது மட்டுமன்றி வைகுண்ட பிராப்தியை அளிக்கும் சக்தி வாய்ந்தது. தங்கம், எள், விளைநிலம், பசுக்கள், தான்யம், குடிநீர், குடை, ஜோடி செருப்பு ஆகியவற்றை பாபங்குச ஏகாதசியன்று தானம் அளிப்பவர் யமலோகம் காண வேண்டிய அவசியமில்லாமல் போகும். ஆனால் இப்புவியில் இத்தகு தானம் செய்யாமல் குறிப்பாக ஏகாதசியன்று உபவாசம் அனுஷ்டிக்காமல் இருப்பவர்களின் சுவாசமானது கொல்லன் பட்டறையில் துருத்தியில் இருந்து வெளிவரும் காற்றினை ஒத்தது.
"ஓ, அரசர்களில் சிறந்தவனே! பாபங்குச ஏகாதசியன்று, ஏழை, எளியவரும் காலையில் முதலில் குளித்து அவரவர் வசதிக்கு ஏற்ப தானம் தர்மம் செய்து, பிறகு பிற சுப காரியங்களை தங்கள் திறனுக்கு ஏற்ப செய்ய வேண்டும். பிறர் நன்மைக்காக யாகம், குளம், ஒய்விடங்கள், தோட்டம், சத்திரம் ஆகியவற்றை அமைப்பவர் யமதர்மனின் தண்டனையிலிருந்து விடுபடுவர். இப்பிறவியில் நீண்ட ஆயுள், செல்வந்தர், உயர்ந்த குலத்தில் பிறப்பெடுத்தல், நோய், நொடி இன்றி திடமான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற்றவர் தனது முற்பிறவியில் இத்தகைய நற்கர்மங்களை செய்ததால் அவற்றைப் பெற்றவர் ஆகிறார். ஆனால் பாபங்குச ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர் பரம்பொருளான விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை அடைவர்."
முடிவில், ஸ்ரீ கிருஷ்ணர் -" புனித யுதிஷ்டிரா, இதுவே சுபமான பாபங்குச ஏகாதசியின் மஹிமையாகும்" என்றருளினார்.
பிரம்ம வைவர்த்த புராணம், ஆஸ்வீன மாதம், சுக்ல பட்ச ஏகாதசி அதாவது பாபங்குச ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
21.10.2018 prana time(sunday) 06.00 to 09:55
If a person strictly observes Papankusha Ekadasi, hundreds of his ancestors are taken by Garuda to the spiritual world, where they attain their original, four-armed, transcendental forms.
பாபங்குச ஏகாதசி
(ஆஸ்வீன மாதம் - சுக்ல பட்ச ஏகாதசி)
அக்டோபர் மாதம் 20ம் தேதி, ஆஸ்வீன மாதம், சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை பாபங்குச ஏகாதசியாக கொண்டாடுவர். பாபங்குச ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.
யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத்மாவிடம், " ஓ மதுசூதனா, ஏகாதசி மஹாத்மியத்தில் அடுத்ததாக ஆஸ்வீன மாதத்தின் சுக்ல பட்ச ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிப்பதன் பயன், மஹிமை பற்றிய கருணை கூர்ந்து விவரமாக கூறுங்கள்." என்று வேண்டுகோள் விடுத்தார்.
பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணர் பதிலளிக்கையில்," ராஜன், பாவங்கள் அனைத்தையும் நீக்கும் ஏகாதசி விரத மஹிமையை உனக்கு சொல்கிறேன், கவனமாக கேள். ஆஸ்வீன மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி பாபங்குச ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று, அனந்தசயனத்தில் வீற்றிருக்கும் சுவாமி பத்மநாபரை விதிமுறைப்படி பூஜை செய்து வணங்க வேண்டும். அதன் மூலம், இவ்வுலக வாழ்க்கையில் வேண்டுவன எல்லாம் பெற்று சுக,போகமாக வாழ்வதுடன், மரணத்திற்குப் பின், மோட்சப்பிராப்தியையும் பெறுவர்.
ஐம்புலனையும் அடக்கி நீண்ட நெடுங்காலம் தவத்தால் பெறக்கூடிய புண்ணிய பலனை, விரத வழிமுறைப்படி ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து, கருட வாகனத்தில் சஞ்சரிக்கும் பகவான் மஹாவிஷ்ணுவை சேவிப்பதால் ஒருவர் பெறலாம். அளவிலா கடும் பாவங்களைப் புரிந்திருந்தாலும், பாவங்களை அழித்து பக்தர்களைக் காக்கும் பரம்பொருளான ஸ்ரீஹரியை வணங்குவதன் மூலம், நரகத்தின் தண்டனையிலிருந்து விடுபடலாம். இப்புவியின் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் கிடைப்பதன் புண்ணிய பலனை, பகவான் மஹாவிஷ்ணுவின் திருநாமத்தை ஜபித்தால் ஒருவர் பெறலாம். பகவானின் புனித திருநாமங்களான ராம், விஷ்ணு, ஜனார்த்தனன், கிருஷ்ணன், இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபிப்பவர், மரணத்திற்குப் பின் எமதர்மராஜன் இருப்பிடமான எமலோகத்தை காண மாட்டார். எனக்கு மிகவும் பிடித்த இந்த பாபங்குச ஏகாதசியை அனுஷ்டிக்கும் பக்தர்களும் எமலோகத்தைக் காண மாட்டார். சிவநிந்தனை செய்யும் வைஷ்ணவர்களும், மஹாவிஷ்ணுவையை நிந்திக்கும் சைவர்களும் நிச்சயம் நரகத்தை அடைவர். நூறு அஸ்வமேத யாகம் மற்றும் நூறு ராஜசூய யாகம் செய்வதால் கிட்டும் புண்ணிய பலனானது, இப்புனித ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் புண்ணிய பலனில் பதினாறில் ஒரு பங்கிற்கு சமமானதாகும்.
ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலனை விட மேலான புண்ணியம் வேறு எதுவும் கிடையாது. பாவங்களை நீக்கி மோட்சப்பிராப்தி அளிப்பதில், அனந்தசயன பத்மநாப பூஜைக்கு உகந்த நாளான பாபங்குச ஏகாதசிக்கு இணையான நாள் இம்மூவுலகிலும் இல்லை. " ஒ ராஜன், ஸ்வாமி பத்மநாபருக்கு உகந்த நாளான பாபங்குச ஏகாதசியன்று உபவாசத்துடன் விரதம் அனுஷ்டிக்கும் வரை, எப்படி பத்தினி தன் கணவனை விட்டு இணைபிரியாமல் இருக்கிறாளோ, அதே போல், பாபங்களும், முற்பிறவி பாவவினைகளின் விளைவுகளும் ஒருவரை விட்டு அகலுவதில்லை.
பாபங்குச ஏகாதசி விரத புண்ணியத்திற்கு இணை இம்மூவ்வுலகிலும் இல்லை. நம்பிக்கையுடன் விரதத்தை அனுஷ்டிப்பவர் மரணத்திற்கு பின்னர் யமதர்மராஜனை காண வேண்டிய அவசியமில்லாமல் விஷ்ணு தூதர்களால் ஸ்ரீ ஹரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். வாழ்விற்குப் பின் மோட்சப்பிராப்தி, சொர்க்கலோக வாசம், திடமான ஆரோக்கியம், அழகான பெண்கள், தனம், தான்யம் இவற்றை விரும்புவர் பாபங்குச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் விரும்பியது அனைத்தும் பெறுவர்.
"ஓ, ராஜன் !, கங்கை, கயா, காசி, புஷ்கரம், மேலான குருக்ஷேத்ரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தீர்த்தங்களில் நீராடி, பகவானை வணங்குவதால் கிட்டும் புண்ணியத்தை விட மேலான பலனை அருளும் சக்தி வாய்ந்தது பாபங்குச ஏகாதசி. ஓ மஹாராஜ் யுதிஷ்டிரா ! புவியை காப்பவரே, பகலில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு, இரவில் கண்விழித்து பகவத்நாம ஸ்மரணம், புராணம், பாகவதம் படித்தல், கீர்த்தனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இப்படி விரதத்தை பூரணமாக கடைப்பிடிப்பவர் மரணத்திற்குப் பின் விஷ்ணு லோகத்தை அடைவர். அதுமட்டுமல்லாமல், தாய், தந்தை மற்றும் மனைவி வழியின் பத்து தலைமுறை முன்னோர்களும் மோட்சப்பிராப்தியை அடைவர்.
மோட்சப்பிராப்தி பெறுவதுடன், முன்னோர்கள் அனைவரும் பூவுலக பிறப்பிற்கு முன் ரூபமான வைகுண்ட ரூபத்தை அடைகின்றனர். மஞ்சள் பட்டாடையில், அழகிய ஆபரணத்துடன், நான்கு திருக்கரங்கள் கொண்டு கருட வாகனத்தில் ஸ்ரீ ஹரியின் இருப்பிடமான வைகுண்டத்திற்குச் செல்வர். இது பாபங்குச ஏகாதசியை நன்முறையில் அனுஷ்டிப்பதால் பக்தர்களுக்கு கிட்டும் பலனாகும். ஒ அரசர்களில் தலைசிறந்தவரே!, குழந்தை, இளைஞர் அல்லது முதிய வயதினர், யாராக இருந்தாலும், பாபங்குச ஏகாதசி விரதத்தை மேற்கொள்வதால் அவர்களின் சகல பாபங்களும் நீங்கி, மறுபிறவி என்னும் சக்கரத்திலிருந்து விடுதலை பெறுவர். அன்று உபவாசம் இருப்பது மிகவும் சிறப்பானது மட்டுமன்றி வைகுண்ட பிராப்தியை அளிக்கும் சக்தி வாய்ந்தது. தங்கம், எள், விளைநிலம், பசுக்கள், தான்யம், குடிநீர், குடை, ஜோடி செருப்பு ஆகியவற்றை பாபங்குச ஏகாதசியன்று தானம் அளிப்பவர் யமலோகம் காண வேண்டிய அவசியமில்லாமல் போகும். ஆனால் இப்புவியில் இத்தகு தானம் செய்யாமல் குறிப்பாக ஏகாதசியன்று உபவாசம் அனுஷ்டிக்காமல் இருப்பவர்களின் சுவாசமானது கொல்லன் பட்டறையில் துருத்தியில் இருந்து வெளிவரும் காற்றினை ஒத்தது.
"ஓ, அரசர்களில் சிறந்தவனே! பாபங்குச ஏகாதசியன்று, ஏழை, எளியவரும் காலையில் முதலில் குளித்து அவரவர் வசதிக்கு ஏற்ப தானம் தர்மம் செய்து, பிறகு பிற சுப காரியங்களை தங்கள் திறனுக்கு ஏற்ப செய்ய வேண்டும். பிறர் நன்மைக்காக யாகம், குளம், ஒய்விடங்கள், தோட்டம், சத்திரம் ஆகியவற்றை அமைப்பவர் யமதர்மனின் தண்டனையிலிருந்து விடுபடுவர். இப்பிறவியில் நீண்ட ஆயுள், செல்வந்தர், உயர்ந்த குலத்தில் பிறப்பெடுத்தல், நோய், நொடி இன்றி திடமான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற்றவர் தனது முற்பிறவியில் இத்தகைய நற்கர்மங்களை செய்ததால் அவற்றைப் பெற்றவர் ஆகிறார். ஆனால் பாபங்குச ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர் பரம்பொருளான விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை அடைவர்."
முடிவில், ஸ்ரீ கிருஷ்ணர் -" புனித யுதிஷ்டிரா, இதுவே சுபமான பாபங்குச ஏகாதசியின் மஹிமையாகும்" என்றருளினார்.
பிரம்ம வைவர்த்த புராணம், ஆஸ்வீன மாதம், சுக்ல பட்ச ஏகாதசி அதாவது பாபங்குச ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
21.10.2018 prana time(sunday) 06.00 to 09:55