Showing posts with label uthaana ekadashi. Show all posts
Showing posts with label uthaana ekadashi. Show all posts

Friday, November 16, 2018

உத்தான ஏகாதசி/ uthana Ekadashi

(19-11-18) உத்தான ஏகாதசி தொடர்பான ஒரு அரிய பதிவு!

வருடத்தில்... மூன்று ஏகாதசிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

கைசிக ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, உத்தான ஏகாதசி ஆகிய மூன்று ஏகாதசிகளும் மிக மிக முக்கியமான நாட்கள் என்று ஆச்சார்யர்களால்
போற்றப்படுகின்றன.

(18-11-18) மதியம் 11-52 முதல் திங்கட்கிழமை மதியம் 12-57 முடிய உத்தான ஏகாதசி திதி அமைந்துள்ளது.

எனவே திங்கட்கிழமை(19-11-18) உத்தான ஏகாதசி விரதம் இருந்து,மதியம் 12 மணிக்குள் பெருமாள் கோவிலுக்கு மகாவிஷ்ணுவை வழிபடுவோர் மகத்தான பலன்களைப் பெற்று மகோன்னதமாக வாழ்வார்கள் என்பது உத்தான ஏகாதசியின் சிறப்பாகும்.

(19-11-18)
உத்தான ஏகாதசி விரதம் இருப்பது, வீட்டின்  தரித்திர நிலையை மாற்றிவிடும்.

வீட்டில் சுபிட்சம் நிலவும்.

கூடுமானவரை, உத்தான ஏகாதசி விரதத்தை முறையாக அனுஷ்டிப்பது உத்தமம்.

இயலாதவர்கள், வயதானவர்கள் பால், பழம், மிதமான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை.
இனரு தினம்(19-11-18) மதியம் 12-57 முடிய உத்தான ஏகாதசி திதி இருப்பதால் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு மதியம் 12.00 மணிக்குள் சென்று பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவதால் எல்லா நல்ல விஷயங்களும் உங்களைத் தேடி வரும்.

மிக முக்கியமாக, நாளைய உத்தான ஏகாதசி நாளில், துளசி தீர்த்தத்தைப் பருகுவது, அத்தனைப் புண்ணியங்கள் கொண்டது என்கிறது சாஸ்திரம்.

ஆகவே,நாளை உத்தான ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளுங்கள். இயலாதவர்கள் மறக்காமல் துளசித் தீர்த்தம் பருகுங்கள்.

கார்த்திகை மாத வளர்பிறையில் தோன்றக்கூடிய உத்தான ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.

ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வதாலும், நூறு ராஜசூய யாகங்கள் செய்வதாலும் அடையக் கூடிய பலனை ஒருவர் இந்த உத்தான ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதாலேயே அடையலாம்.

இந்த உத்தான ஏகாதசி ஒருவருக்கு, காணாதவை, விரும்பாதவை மற்றும் மூவுலகங்களிலும் அரிதானவை போன்ற அனைத்தையும் அளிக்கிறது.

இந்த உத்தான ஏகாதசி மந்தார மலை அளவிற்கு உள்ள கடுமையான பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.

இந்த உத்தான ஏகாதசியன்று புண்ணியத்தை சேர்ப்பவர் சுமேரு மலைக்கு ஈடான அளவு பலன்களை அடைவார்.

உத்தான ஏகாதசி விரதத்தை முழு நம்பிக்கையுடன் அனுஷ்டிப்பவரின் நூறு பிறவிகளின் பாவ விளைவுகள் அனைத்தும் மறைந்துவிடும்.

ஒருவர் உத்தான ஏகாதசியின் இரவு(18-11-18) முழுவதும் விழித்திருந்து விஷ்ணு வழிபாடு செய்வதால் அவருடைய முற்கால, நிகழ்கால மற்றும் வருங்கால தலைமுறைகள் அனைவரும விஷ்ணுவின் பரமத்தை அடைவர்.


கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் உத்தான ஏகாதசியன்று
ரோஜா மலர்களால் பகவான் விஷ்ணுவை வழிபடுபவர்கள் நிச்சியமாக முக்தி அடைவார்கள்.

கார்த்திகை மாத  வளர்பிறையில் வரும் ஏகாதசி என்பது 'ப்ரபோதினி' அல்லது 'உத்தான ஏகாதசி' ஆகும்.

பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பெருமாள், இந்த உத்தான ஏகாதசி அன்றுதான் விழித்தெழுகிறார்.

எனவே இந்த உத்தான ஏகாதசி நாளில் மஹாவிஷ்ணுவையும் துளசிதேவியையும் வழிபடுவது மிகவும் விசேஷம்.

 (19-11-18)உத்தான ஏகாதசி நாளில் மதியம் 12.00 மணிக்குள் பெருமாள் கோயில் தீர்த்தத்தை அருந்துவது மகத்தான புண்ணியம் கொண்டது என்கிறது சாஸ்திரம்.

 (19-11-18)உத்தான ஏகாதசி நாளில் அதிகாலையில் குளித்து முடித்து வீட்டில் பூஜையறயில் உள்ள பெருமாள் படம் முன்பாக அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் சகல சத்விஷயங்களையும் அடைவீர்கள் என்பது உறுதி.

விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய தெரியாதவர்கள் விஷ்ணு சஹஸ்ரநாம ஒலி நாடாவினை
கேட்டுக்கொண்டே பெருமாளை வழிபடலாம்.

அதுவும் முடியாதவர்கள் சிவ பெருமானால் பார்வதி தேவிக்கு உபதேசிக்க பட்ட கீழ்கண்ட எளிமையான ஸ்ரீ ராம மந்திரத்தை ஜெபிக்கலாம்.

ஸ்ரீ ராம மந்திரம்

"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ஸ்ரீ ராம நாம வரானனே".

இந்த மந்திர ஸ்லோகத்தில் மூன்று முறை "ராம" என்ற நாமம் வருகிறது.

ராம நாமம் தாரக நாமம்.

அதாவது த்ரேதா யுகம் முடிந்து த்வாபர யுகம் முடிந்து கலியுகத்தில் ஸ்ரீ ராமனின் நாமத்தை அனுதினமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்,கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதுதான் ராம நாமத்தின் மகிமை.

ராம என்பவை இரண்டு அக்ஷரங்கள்.

நாராயணா என்ற நாமத்திலிருந்து "ரா" அக்ஷரத்தை முதல் அக்ஷரமாகவும்,
நமசிவாய என்ற நாமத்திலிருந்து
"ம" அக்ஷரத்தை இரண்டாவது அக்ஷரமாகவும் இந்த ராம நாமத்தில் உள்ளது.

"ரா" என்பது அக்னி பீஜம்.

"ம" என்பது அம்ருத பீஜம்.

"ரா" என்ற உச்சரித்ததும் நம்முடைய அனைத்து பாபங்களும் நம்மை விட்டு விலகி விடுகிறது.

"ம" என்று உச்சரித்ததும் பாபங்கள் ஏதும் நம்முள் செல்லாமல் தடுக்கப்படுகின்றது.

இந்த எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன.

"ர" என்ற எழுத்துக்கு எண் 2ம்,
"ம" என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும்.

மேலே ஸ்லோகத்தில் "ராம" என்ற நாமம் மூன்று முறை வருகின்றது.

 அதாவது 2X5 2x5 2x5. என்றால் 2X5=10x2=20x5=100x2=200x5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.

இதுதான் இந்த ராம நாமத்தின் அற்புதம்.

இந்த கார்த்திகை மாத வளர்பிறை "உத்தான ஏகாதசி" நாளன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் விஷ்ணு பகவானுக்கு
நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோகத்திலேயே சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

ஆகவே, உத்தான ஏகாதசி நாள் ஆன 19-11-18 அன்று விரதம் மேற்கொண்டு விஷணுவை வழிபடுங்கள்,
முக்தியடையுங்கள்.