Tuesday, February 23, 2021
ஜெய ஏகாதசி
Sunday, September 27, 2020
18 puranas/18 புராணங்கள்
பத்மினி ஏகாதசி/padmini ekadashi
Monday, September 21, 2020
அருள்மிகு துந்திராஜ் கணபதி கோவில், வாடி, வதோதரா,
Saturday, September 19, 2020
அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம் (திருக்கைச்சின்னம்), திருவாரூர் மாவட்டம்.
Sunday, September 13, 2020
Indira Ekadashi/ இந்திர ஏகாதசி
நம் முன்னோரை கடையேற்றும் இந்திரா ஏகாதசி.....!!!
13.9.2020இந்திரா ஏகாதசி மஹாலய பக்ஷத்தில் அமைவதால் இதற்கு தனி மகத்துவம் உண்டு.இந்த ஏகாதசி விரதம் நம் பாபங்களை போக்குவதோடு நம் முன்னோர்களின் பாபங்களையும் போக்குவதாக அமைகிறது.
இந்திரா ஏகாதசி விரத கதை.....!
முன்பொரு காலத்தில் மகிஷ்மதிபுரி ராஜ்யத்தை இந்திரசேனர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் சிறந்த முறையில் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்.அவரது ஆட்சியில் மக்கள் குறை இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள். மன்னர் சிறந்த விஷ்ணு பக்தரும் கூட. விஷ்ணுவை போற்றி வணங்குவதில் சிரத்தை உள்ளவர்.
ஒரு நாள் மன்னர் தர்பாரில் இருந்த போது அங்கு நாரத முனிவர் வந்தார். அவரை சகல மரியாதையுடன் வணங்கிய மன்னர் அவர் வந்த காரணம் வினவினார். நாரதர் தான் வந்த காரணத்தை விவரிக்க ஆரம்பித்தார்.
நாரதர் பிரம்மலோகத்தில் இருந்து யமலோகத்திற்கு இறங்கிய போது யமராஜரால் வரவேற்கப்பட்டார். அவரின் சபையில் சகல மரியாதைகளுடன் அமர்ந்திருந்த போது சபையினருக்கு நடுவே இந்திரசேனரின் தந்தையும் இருக்கக் கண்டார். ஆச்சர்யப்பட்ட நாரதரிடம் இந்திரசேனரின் தந்தை தான் ஒரு ஏகாதசி விரதத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முறித்ததன் விளைவாக தான் நரகத்தில் அல்லல்படுவதாக உரைத்தார்.
இந்திரசேனரின் தந்தை இந்திரசேனரை இந்திரா ஏகாதசி விரதம் இருக்குமாறு நாரதர் மூலம் கேட்டுக் கொண்டார். இதனால் தான் நரகத்திலிருந்து விடுபட்டு வைகுண்டம் சேர முடியுமென உரைத்தார். அவர் கூறியதை இந்திரசேன மன்னரிடம் கூறவே நாரதர் மன்னரை நாடி வந்துள்ளார்.
இதனை அறிந்தவுடன் நாரதரிடம் மன்னர் இந்திரா ஏகாதசி பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதன்படி தனது சுற்றத்தோடும், ஏனையரோடும் விரதமிருந்து தனது தந்தைக்கு நல்வழி காட்டினார். தனது தந்தை கருட வாகனம் ஏறி வைகுண்டம் செல்வதை கண்டார். அவர் த்வாதசி அன்று விரதம் முடிக்கும் போது அவரது பக்தியை மெச்சி அவர் மீது ஆகாயத்திலிருந்து பூமாரி பெய்தது. மன்னரும் பிற்காலத்தில் வைகுண்டம் சேர்ந்தார்.
இந்திரா ஏகாதசியில் முறைப்படி விரதமிருந்தால் நமது பாபம் மட்டுமன்றி நம் முன்னோர்களின் பாபங்களும் நீங்கும்.
நரகத்தில் வாடும் முன்னோர்கள் வைகுண்டம் நோக்கி செல்வார்கள்.
இந்த ஏகாதசி விரத கதை கேட்போருக்கு (குதிரை) அஸ்வம் தானம் செய்த பலன் கிடைக்கும்.
இதனை படிப்போருக்கும் கேட்போருக்கும் வாழ்வில் வளமும்,முக்தியும் கிடைக்கும்.
இத்தனை நன்மை பயக்கும் இந்திரா ஏகாதசி விரதத்தை கடைபிடித்து நம் வாழ்வை வளப்படுத்தி ,நம் முன்னோர்கள் உய்யவும் வழி தேடுவோம்
Thursday, September 03, 2020
Sri suktham with meaning
*ஸ்ரீ.ஸுக்தம் பொருளுடன் புரிந்து படிப்போம்*
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவகா
*பொருள் :* விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் எனக்குக் கிட்டும்படி அருள வேண்டுகிறேன்.
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ - மநபகாமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷாநஹம்
*பொருள் :* அந்த லக்ஷ்மி கடாட்சம் என்னிடம் இருந்தால் நான் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரியுங்கள்.
அஸ்வபூர்வாம் ரத - மத்யாம் ஹஸ்திநாத -ப்ரபோதிநீம்
ஸ்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்
பொருள் : குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை என்னிடத்தில் வருமாறு அழைக்கிறேன். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி என்னை வந்தடையட்டும்.
காம் ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா
மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம்
*பொருள் :* மகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிரகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரினால் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஒளியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறைவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், ஸ்ரீ என்ற பெயரை உடையவளுமான லட்சுமிதேவியை என் இருப்பிடத்திற்கு அழைக்கிறேன்.
சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம்
ஸ்ரியம் லோகே தேவஜூஷ்டா - முதாராம்
தாம் பத்மிநீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே
லக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே
*பொருள் :* பக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளும், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவளும், வேத, இதிகாச புராணங்களில் போற்றப்படுபவளுமான தேவியை நான் சரணடைகிறேன். என்னுடைய வறுமை அழியட்டும். எனக்கு அருள் கிடைக்கட்டும்.
ஆதித்ய - வர்ணே தபஸோ திஜாதோ
வநஸ்பதிஸ்தவ வ்ருக்ஷத பில்வ:
தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த
ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ
*பொருள் :* சூரியனைப் போல் ஒளிநிறைந்தவளே ! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம் உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி அருளவேண்டும்.
உபைது மாம் தேவஸக கீர்த்தஸ்ச மணிநா ஸஹ
ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே - ஸ்மித் கீர்த்திம்ருத்திம் ததாது மே
*பொருள் :*
நீ என்னை அடைய வரும்பொழுது தேவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்த மகா விஷ்ணுவும் உடன் வருவார். இந்த பூமியில் பிறந்திருக்கும் எனக்குக் கீர்த்தியையும், ஐஸ்வர்யத்தையும் கொடுத்தருள வேண்டும்.
க்ஷúத் -பிபாஸா மலாம் ஜ்யேஷ்டா - மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம்
அபூதி - மஸம்ருத்திம் ச ஸர்வாந் நிர்ணுத மே க்ருஹாத்
*பொருள் :* உன் அனுகிரகத்தை அடைந்தால் அதன் பலத்தால், பசி, தாகம், பீடை இவற்றை உண்டு பண்ணுகிற மூதேவியை என்னைவிட்டு அகலும்படி செய்துவிடுவேன். சகலவிதமான வறுமையையும் மேன்மேலும் வரவிடாமல் என்னுடைய வீட்டிலிருந்து நீ அகற்றியருள வேண்டும்.
கந்த - த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈஸ்வரீகும் ஸர்வ - பூதாநாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம்
*பொருள் :* வாசனைமிக்க திரவியங்களை முதலில் அனுப்பி அதன்பிறகு வந்தவளும், தீயவர்களால் அடைய முடியாதவளும், எப்பொழுதும், எப்பொருட்களாலும் நிறைவுள்ளவளும் கரீஷிணி என்ற திருநாமத்தைப் பெற்றவளும், அனைவராலும் போற்றப்படுபவளுமான உன்னை, இங்கே என்னிடம் (எங்கள் இல்லத்தில்) நித்தியவாசம் (எப்போதும் நீங்காது இருக்கும்படி) செய்யும்படி அழைக்கிறேன்.
மனஸாகாமமாஹுதிம் வாஸ: ஸத்ய மசீமஹி
பசூநாம்ரூபமந்தஸ்ய மயிஸ்ரி ஸ்ரயதாம் யசஹா
*பொருள் :* மனதினுடைய விருப்பத்தையும், சந்தோஷத்தையும் வாக்கினுடைய உண்மையையும் அடைவோம். பசுக்களுடையவும் உணவுப் பொருள்கள் உடையவும், பலவிதமான உருவத்தையும் அடைவோம். என்னிடத்தில் லக்ஷ்மிதேவியானவள் நித்யவாசம் செய்யவேண்டும்.
கர்த்தமேந ப்ரஜாபூதா மயிஸம்பவ கர்தம
ச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலினீம்
*பொருள் :* கர்த்தம ப்ரஜாபதி என்னும் மகரிஷியால் தேவி, புத்திரமதி ஆனாள். கர்த்தமனே என்னிடத்தில் நித்யவாசம் செய்வாயாக. தாமரை மாலையை அணிந்துகொண்டிருக்கிற உனது தாயாராகிய ஸ்ரீதேவியை எனது வீட்டில் வசிக்கச் செய்வாயாக.
ஆபஸ் ஸ்ருஜந்துஸ் நிக்தானி சிக் லீத வஸ மே கிருஹே
நிக தேவீம் மாதரம்ச்ரியம் வாஸயமே குலே
*பொருள் :*
ஓ சிக் லீதரே, தண்ணீர், நெய், தயிர், பால் முதலிய பொருட்கள் என்னுடைய வீட்டில் குறைவின்றிப் பெருகவேண்டும். எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிற உம்முடைய தாயை (ஸ்ரீதேவியை) எனது வீட்டில் வசிக்கச் செய்து அருளும்.
ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸ்வர்ணாம் ஹேமமாலினீம்
சூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத வேதோ மமாவஹ
*பொருள் :* கருணையால் நனைந்தவளும் (தயையால் நனைந்த இதயம்) தாமரைப் பூவில் வாசம் செய்கின்றவளும் நிறைவின் உருவானவளும், தாமரைப் பூமாலையைத் தரித்தவளும், எல்லா உயிர்களையும் மகிழ்விப்பவளும், பொன் போன்ற பரிசுத்தமான மேனியை உடையவளுமான மகாலட்சுமி என் இருப்பிடத்திற்கு வருமாறு செய்தருளுங்கள்.
ஆர்த்தராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்ம மாலினீம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ மமாவஹ
*பொருள் :* பகவானாகிய அமுதத்தால் நனைந்த திருமேனியையுடையவளும், செங்கோலுக்கு அடையாளமாக தண்டாயுதத்தை கையில் தரிப்பவளும், மெலிந்த திருமேனியை உடையவளும், கண்களுக்கு ஆனந்தகரமான வடிவினை உடையவரும், தங்கத்தினால் செய்யப்பட்ட பூமாலையை அணிந்தவளும், சூரியனைப் போன்ற பிரகாசமுடையவளும், தங்கமயமானவளுமான லட்சுமிதேவியை என்னிடம் வரவழைத்து அவள் என்னிடம் நித்யவாசம் செய்ய அருளுங்கள் திருமாலே !
மாம் ம ஆவஹக ஜாதவேதோ லக்ஷ்மி மநமகாமினிம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோதாஸ் யோஸ் வாநீவிந்தேயம் புருஷனாநஹம்
*பொருள் :*
ஓ பகவானே, எந்த லக்ஷ்மி என்னிடம் வசிக்கையில் ஏராளமான பொன் பொருள்களும், பசுக்களும், சேவகர்களும் குதிரைகளும், உற்றார்களும், நண்பர்களையும் நான் அடைவேனோ, அப்படிப்பட்ட ஸ்ரீமகாலக்ஷ்மி என்னிடம் நித்யவாசம் செய்ய அருளவேண்டும்.
பத்மப்ரியே பத்மிநி பத்மஹஸ்தே
பத்மாலயே பத்மதளாய தாக்ஷி
விஸ்வப்ரியே விஷ்ணுமநோ நுகூலே
த்வத் பாத பத்மம் மயிஸந்நிதத்ஸ்வ
*பொருள் :* தாமரையில் பிரியம் உள்ளவளே. தாமரைக்குச் சொந்தக்காரியே. தாமரையைக் கையில் தரித்தவளே. தாமரையில் வசிப்பவளே. தாமரை போல் நீண்ட கண்களை உடையவளே. உலகத்து மக்களால் விரும்பப்படுபவளே. விஷ்ணுவின் மனத்திற்குப் ப்ரியமானவளே. உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை என் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.
ஸ்ரியே ஜாத ஸ்ரியே ஆநிர்யாய
ஸ்ரியம் வயோஜநித்ருப்யோ ததாது
ஸ்ரியம் வசாநாம் அம்ருத த்வமாயன்
பஜந்தி சத்யஸ் சவிதா விதத்யூன்
*பொருள் :* லட்சுமி தேவியின் விளையாட்டால் செய்யப்பட்ட இந்த உலகம் பிரகாசமானது. உலகில் பிறந்தவர்களுக்கு எல்லா ஐஸ்வர்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வல்லது. அவளை உபாசனை செய்பவர்கள் ஜனன மரணமில்லாத பிரம்மானந்தத்தை அடைவார்கள். இன்றும் நாளையும், (எப்பொழுதும்) சுயமான பிரகாசமான நிலையை அடைவார்கள். இல்லத்தில் சகல போகமும், பரத்தில் மோட்சமும் அடைவார்கள்.
ச்ரிய ஏவைனம் தச்ச்ரியா மாததாதி ஸந்ததம்
ருசாவஷட்கரத்யம் ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பசுபிஹி.
*பொருள் :* எவனொருவன் இந்த ஸ்ரீ சூக்தத்தின் பலன்களை அறிகிறானோ, அவனுடைய செல்வங்களே மேலும் மேலும் வளர்ந்து ஐஸ்வர்யங்களை உண்டாக்குகின்றன. ரிக் வேதத்தில் கூறப்பட்ட இந்த ஸ்ரீ சூக்தத்தை முன்னிருத்தி ஹோம காரியங்களைச் செய்பவர் புத்திர சந்தானத்தோடும், பசுக்களோடும், ஐஸ்வர்யங்களோடும் அனைத்து வளங்களையும் அடைகிறார்.
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
*பொருள் :* இந்த உலகங்கள் அனைத்தும் ஸ்ரீமகாவிஷ்ணு, லக்ஷ்மிதேவி இருவரையும் சேர்ந்தவை. அதனால் பெரிய பிராட்டியானதேவியை உபாசனை செய்கிறோம். விஷ்ணு பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லட்சுமி நாராயணரை வழிபடுவதற்கான புத்தியையும், அதை நிறைவேற்ற சக்தியையும் தந்து அருளவேண்டும். (இந்தக் கடைசி ஸ்லோகமே லக்ஷ்மி காயத்ரி ஸ்லோகமானது. அதிக விசேஷமானது. எங்கேயும், எப்போதும் சுத்தமாக, ஆச்சாரமாக இருந்து இதைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.)
Saturday, August 29, 2020
Sri Vamana Charitre - Sri Sri Sripadaraja Theethar
*Sri Vamana Charitre - Sri Sri Sripadaraja Theethar*
Aditaadeviyu payovrutava maadidalaake | patiya aagneya kelikondu ||
Pruthviyanellaa kramisuva swaami taa sutanaagi alle janisidanu || 1 ||
Jaata karmava maadi madhuvittu mudadinda |punyavaachana maadisikonda ||
Koti godaana kottu kashyapa taanu |shree krushnagarpitavenda || 2 ||
Dasharaatri kaleyalu asura samhaaraga | shashimukhiyarella neredu |
Yashavo chinnada tottilolittu tooguta | hesaranu ittaru vaamanananta || 3 ||
Annapraashana maadi choulakarmava maadi | tanna bandhugalanella karesi |
Hanneradu varusha tapaviddu padedaa | mohannaga munji kattidaru || 4 ||
Upanayanavanu vaamanaga kashyapa maade | sati saraswati bhaaratiyaru |
Atibhaktiyinda ungurava bhikshavanittaru | muttinaarati ettidar harushadali || 5 ||
Danda kamandala yagnopapeetavu | munche krushnaajinavannu dharisi |
Andige kirugejje sarapaliyu ghillu ghillenutali | banda vaamana bali raayana sabheyalli||6||
Koti soorya chandra kaanti shobhisuvanthaa | notadalii muddina mukhavu |
Notadi karunaa rasasoosi holevanthaa | prakhyaata bandaa raajasabhege || 7 ||
Taala maddale bheri damarembo | naatyavaadidaru rambhe menagayaru |
Chaturmukha brahma stotrava maadi barutire | parama purushanu eetanendu || 8 ||
Dhareyolaguttama sundara purushana | beragaagi nintu nodidaru |
Muttina maniya tandittanu baliraaya | itta banniri kullirendaa || 9 ||
Ettakadeyinda bandiri neevu Enu kaaranavendu
kai etti hastava mugidaa |
Bahala dooradinda bandenu baliraaya | ninna mooruti keeruti keli || 10 ||
Mooru paadada bhoomi daanava kodu endu | bedi kondanu brahmachaari |
Enu beduveyo bada braahmanane | kanakava bedu naa daana koduve || 11 ||
Enoo bedaa enage mooru paadadaa bhoomi | kodu saakenutaa idda |
Yaachaka ivanallaa yadukula tilakanu | maatinali manava kombuvandu soochanayamadidharu || 12||
Shuklraacaaryaru | balu jokeendu helidaru |
Eshtu helidaroo iva bittu hoguvanallaa ||
sittili shaapisiluva
Kotte yadukula tilakage | daanava kotta maatige tappadhange ||13||
Muttina gindili udakava taarendu |
tanna vallabhege helidaanu ||
Anda maatanu keli tandalu udakavaa | vindyaavaliyu sabheyalli ||14||
Pannanga shayanana paadapadmava toledu dhanyaraadevu endenalu ||
Uttama purushana paada padma toleyalu|suranadi sutti hariyitu naalku brahmaanda || 15||
Innondu paadava idalikke sthalavillaa | innelli nanu idali helendaa ||
Nettiya mele ittu nija vulla | paadava vottida paataaladalli ||16||
Chennaga hariya paadava kandu | anyaayave ambaru janaru ||
Naabhi kamaladinda brahmadevara padedaa | paadadinda bhaageerathi padedaa ||17||
Koredaadeyinda tungabhadreya padeda | naaraayanage edurillaa ||
Taa kramisida mooru sutala lokavannu | trivikrama roopanagi nintaa ||18||
Ashtaishwarya sowbhaagya sampattu embo | pattanavannu nirmisidaa ||
Patta shaasana ghatana maadidaa baliraayaga | kottaanu sutala lokavanu ||19||
Baliya bagila kayuda bhakthavathsala
Swamy dharayannu uddarisidha |
Deva bhalavanta swamy
Sri ranga vittalana anudina nenekandyaa manave || 20 ||
Sri krishnarpanamasthu🙏🙏🙏
Friday, August 28, 2020
பரிவர்தினி ஏகாதசி/ parivarthini ekadashi
*பரிவர்தினி ஏகாதசி*
29/08/2020
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பாத்ரபத மாச சுக்ல பக்ஷ திதியில் வரும் ஏகாதசி பரிவர்த்தனை ஏகாதசி.
மகாவிஷ்ணுவும் தேவயணி ஏகாதசியில் யோக நித்திரைக்கு ஷீர சாகரத்தில் படுத்துக் கொள்கிறார்.அவர் உறங்கும் நான்கு மாதங்கள் சாதுர்மாஸ்யம் என்று சிறப்பாக நாம் அனைவரும் கடைபிடிக்கிறோம். சாத்தூர் மாதத்தில் வரும் ஐந்தாம் ஏகாதசி பரிவர்தினி ஏகாதசி . தேவசயணி ஏகாதசியில் உறங்கும் மகாவிஷ்ணு,
உத்தான ஏகாதசியில் அவர் மீண்டும் யோக நித்திரையில் இருந்து எழுகிறார். இந்த பரிவர்த்தினி ஏகாதசியின் பொழுதுதான் அவர் தன் உறங்கும் நிலையை மாற்றிக் கொள்கிறார்.
*பரிவர்த்தினி விரத கதை*
திரேதாயுகத்தில் மகாபலி சக்கரவர்த்தி (king Bali), பிரகலாதனின் பேரன் மூவுலகையும் ஆண்டுவந்தான் ( தேவலோக, பூலோக, பாதாள லோக). அவன் ஒரு அசுரனாவான். ஆனாலும் மகாவிஷ்ணுவின் தீவிர பக்தன். தன் தாத்தா பிரகலாதனை போலவே நன்முறையில் ஆட்சி செய்து வந்தான். பிரகலாதர் அசுரன் ஹிரண்யகசிபுவின் மகன் ஆனாலும் அவர் அந்த குணங்களை வெளிப்படுத்தியது கிடையாது.மகா விஷ்ணுவின் தீவிர பக்தர் ஆவார். மக்களுக்கு நன்முறையில் ஆட்சி செய்து வந்தார் அவரைப் போலவே மகாபலி சக்கரவர்த்தியும் நன்முறையில் ஆட்சி புரிந்து வந்தார்.
*வாமன அவதாரம்*
ஒருமுறை பலி சக்கரவர்த்தி இந்திரனுடன் நடந்த யுத்தத்தில் இந்திரனை வீழ்த்திவிட்டார். அதனால் அவர் எந்த எதிர்ப்பும் இன்றி தேவலோகத்தையும் ஆட்சிபுரியும் தேவலோக தலைவன் ஆனார். தேவர்களுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. அசுரர்கள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்தால் உலகத்திற்கு தீங்கு தான் நேரும் என்று புரிந்துகொண்டு, உடனடியாக மகாவிஷ்ணுவிடம் சென்று அனைவரும் முறையிட்டனர். இதை எப்படியேனும் தடுக்க வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர்.
மகாபலி விஷ்ணுவின் தீவிர பக்தன். நல்ல அரசனும் கூட ஆகையால் மகாவிஷ்ணு ஒரு தீர்மானம் மேற்கொண்டார். தன் பக்தனை சோதிப்பதற்காக.மகாவிஷ்ணு தன் ஐந்தாம் அவதாரமான *வாமன அவதாரத்தை* மேற்கொள்ளும் தருணம் அது. முடிவெடுத்தார், வாமனனாக தன்னை உருமாற்றினார்.
*மூன்று அடி நிலம்*
மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார். சமயம் வந்தது. மகாபலி தன் அரண்மனையில் யாகம் நடத்திக் கொண்டிருந்தான். அனைவருக்கும் தான தர்மங்களை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தார். யார் எதைக் கேட்டாலும் கொடுத்தார்.
நம் வாமனர் சின்னஞ்சிறு பிராமண சிறுவன். தன் அன்னை தந்தையிடம் யாசகம் பெற்று வருவதாக சொல்லி கொண்டு சென்றார். மகாபலி சக்கரவர்த்தி அரண்மனை சென்றார். எனக்கு யாசகம் வேண்டும் என்றார். மகாபலி சக்கரவர்த்தி அவ்வாறே தங்களுக்கு என்ன வேண்டுமோ தர தயாராக இருப்பதாகவ வாக்கு உரைத்தார்.
எனக்கு நிறைய ஒன்றும் வேண்டாம் என் பாதஅளவில் மூன்று அடி நிலம் கொடுத்தால் போதும் என்று கேட்டார் நம் வாமனர். அவ்வாறே தருவதாக பலிச்சக்கரவர்த்தி வாக்களித்து விட்டார்.
இதற்கிடையில் அசுர குருவான சுக்ராச்சாரியார் வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணுவே என்று உணர்ந்தார். இதை பலிச் சக்கரவர்த்தியிடம் எச்சரிக்கவும் செய்தார் ஆனால் பலிச்சக்கரவர்த்தி தான் கொடுத்த வாக்கை திரும்பப் பெற மறுத்துவிட்டார்.
தான் அளித்த வாக்கின்படி வாமனருக்கு மூன்று அடி நிலத்தை தர சங்கல்பம் செய்யலானர்.
வாமனர் தன் முதல் அடியிலேயே பூவுலகை அனைத்தும் அடக்கி விட்டார். தன் இரண்டாம் அடி எடுத்து வைத்தார் அதில் தேவலோகம் வான்லோக முழுவதும் அடங்கிவிட்டது. இப்பொழுது மூன்றாவது அடி வைக்க இடமே இல்லை. எங்கு வைப்பது என் மூன்றாவது அடியை? என்று வாமனர் பலி சக்கரவர்த்தியிடம் கேட்டார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்று உணர்ந்து தன் தவறை எண்ணி வருந்தி, தன் தோல்வியை ஒப்புக் கொண்டு மகாவிஷ்ணுவிடம் மண்டியிட்டு தம் மூன்றாம் பாதத்தை தன் தலையில் வைக்குமாறு கேட்டார். மகாவிஷ்ணு தன் மூன்றாம் பாதத்தை பலிச்சக்கரவர்த்தியின் தலைமீது வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பி விட்டார். அங்கு சென்று பாதாள உலகத்திற்கு ராஜாவாக இருக்கும்படி ஆணையிட்டார்.
*ஏகாதசி பலன்*
மகாவிஷ்ணுவே காக்கும் கடவுள். பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து நம்மை காக்க கூடியவர் மகாவிஷ்ணுவே. ஏகாதசி விரதம் இருப்பதால் பூலோகத்தில் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை பெற்று பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து மீண்டு பகவானையே அடையும் மார்க்கத்தை நமக்கு தரவல்லது ஏகாதசி விரதம்.
*"ஹுட்டிசலு பேட எண்ண ஹு ட்டிதிசிதக காயோ எண்ண இஷ்டு மாத்ர பேடி கொம்பே ஸ்ரீ கிருஷ்ண.."*
பரிவர்த்தினி ஏகாதசி விரதத்தை ஒருவர் கடைப்பிடிப்பதால், அறியாமல் செய்த குற்றங்கள் மற்றும் பாவங்களிலிருந்து மீளவும் மற்றும் வாஜ்பேய யாகம் செய்த பலன் பெறுவர்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Mrs. Chandrika Arvind
Saturday, August 15, 2020
அஜ ஏகாதசி/ Aja Ekadashi
*அஜ ஏகாதசி*
*முன்வினை பாவங்கள் நீக்கும் அஜ ஏகாதசி விரதம்*
🌷🌷🌷🌷🌷🌷
*15-08-2020*
🌷🌷🌷🌷🌷🌷
இன்றைய தினம் *அஜா ஏகாதசி* இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகாபாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார்.
முன்னொரு காலத்தில், பகவான் ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என்றொரு அரசன் சத்தியம் தவறாது மாபெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். நாடும், அவனும் எந்த விதமான குறையும் இன்றி, சுபிட்சத்தோடு விளங்கியது.
*அரிச்சந்திர மகாராஜா*
விதிவசத்தால், அரிச்சந்திர மகாராஜா தனது நாடு, நகரம் அனைத்தையும் இழக்க நேரிட்டதோடு, மனைவி, மக்களையும் விற்கும் மிகக் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டார். பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடிமையாகி மயானத்தைக் காக்கும் பணியில் அமர வைத்தது விதி. ஆனால் அந்நிலையிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத்தன்மையை இழக்காமல் சத்தியத்தினை கைவிடாது கடைபிடித்து வந்தார்.
*முனிவரின் ஆலோசனை*
பல காலங்கள் கடந்தன. ஒரு நாள் அவர், நான் என்ன செய்வேன் ? இன்னும் எத்தனை காலம் இது போன்ற வேதனையில் வாடுவது, இதிலிருந்து மீள வழியே இல்லையா? என்று மிகவும் வருந்தினார். அப்போது அதிர்ஷ்டவசமாக, அவன் அந்த வழியாக சென்ற கௌதம முனிவரைக் கண்டு தனது நிலைமையை எடுத்துக் கூறி, இதிலிருந்து மீள வழி கூறுமாறு வேண்டினார்.
*ஏகாதசி விரதம்*
அரிச்சந்திரனின் சோகக் கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட முனிவர், அவருக்கு இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். அரிச்சந்திரா !! உனது நல்ல காலம், இன்னும் ஏழு நாட்களில் பாவங்கள் அனைத்தையும் நீக்கி மிகவும் நற்பலன்களை அளிக்க வல்ல அஜா ஏகாதசி எனப்படும் அன்னதா ஏகாதசி வரவிருக்கிறது. இந்நாள் மிகவும் மங்களமானது.
*கண்விழித்து விரதம்*
இந்நாளில், நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், உபவாசத்தை மட்டுமாவது ஏற்று, அன்று இரவு கண் விழித்து இறைவன் ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்து கொண்டிரு ... இதன் காரணமாக உனது முற்பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெற்று நன்னிலையை அடைவாய் எனக் கூறினார்.
*ராஜ்ஜியத்தை அடைந்த அரிச்சந்திரன்*
அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தினைப் பெற்று நன்னிலையை அடைந்தான். மேலும் இந்த விரதத்தின் பலனால் மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடைந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்குக் கூறி முடித்தார்.
*அஜா ஏகாதசியின் சிறப்புகள்*
அதோடு அவர் யுதிஷ்டிரனிடம், ஓ பாண்டு புத்ரா !! நீயும் இப்போது இந்த அஜா ஏகாதசியின் சிறப்புகளை அறிந்து கொள் !! எனக் கூறத் தொடங்கினார். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியில் பக்தி லோகத்தை அடைவர் என்று கூறினார்.
*அஸ்வமேத யாகம் செய்த பலன்*
எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.
🙏🙏🙏🙏🙏
ராதே கிருஷ்ணா
🌻🌻🌻🌻🌻🌻🌻