Wednesday, July 15, 2020



Deepasthamba Puja, also known as Deepasthambha Amavasya Pooja(Kendan Pooja), is an important observance undertaken by womens' in Madwa.  It is observed on the no moon day (Amavasya) in the Kannada month of Ashada (July – August) and is a unique Madwa ritual. On the day women pray for the well being of male members in the family – husbands and brothers. The ritual is also known as Bheemana amavasya vratha

Deepasthambha Puja is dedicated to Lord Shiva and Goddess Parvati. Married women perform it for the long life of husbands and brothers. Unmarried women for getting a good husband.

A pair of lamps made by women on the day using mud(Semman) known as Kalikamba represents Lord Shiva and Goddess Parvati. on the day Special pujas are done on the auspicious day to Please them. Thambittu Deepa or Thembittu lamp made from flour is made on the occasion and lit to cool all bad emotions like anger, frustration etc. It is these lamps that give the ritual the name Deepasthamba.

The ritual is based on the story of a young girl who was married to a dead prince. She accepted her faith and the day after marriage she performed the Deepasthambha Amavasi puja with mud lamps. Impressed by her devotion, Shiva and Parvati appeared before her and brought back the Prince to life. The mud kalikamba prepared by her was broken by Lord Shiva.

Married women perform the Deepasthamba Puja for nine years after marriage. In ninth year, she presents a lamp to her brother(s) or a male member in the family.

How to observe Deevike Ammavasya Pooja?
Requirements
  • A pair of mud kalikamba lamps representing Shiva and Parvati or picture of Shiva and Parvati or Silver lamps.
  • Thembittu lamps
  • Turmeric roots
  • Yellow thread
  • Kajavastra
  • Flowers
  • Betel leaves
  • Betel nuts
  • Bananas
  • Unbroken coconut
  • Fruits 
  • Blouse bit
  • Rice
All things needed for the Puja are arranged. There are no strict rules you can always substitute things.
House is cleaned and decorated, especially the Puja area.
Fried things are not prepared on the day.

Preparation for the Puja
Make or buy a pair of Kalikamba lamps – it represents Shiva and Parvati and it is worshipped on the day. (Instead of Kali kamba lamps people also use idol or image of Goddess Parvati and Shiva or a pair of silver lamp or a single lamp).Kalikamba lamps are cleaned and decorated – with sandalwood, turmeric paste or other similar items.A yellow thread is used to tie turmeric root and it is tied to one of the lamps. This is Goddess Parvati.

Take a tray(Manai/Palagai),and cover it with a new blouse bit and is placed facing East. Kalikamba lamps is placed on rice or grains on it. A garland is created using cotton(kajavastra) and is used to decorate the
Kalikamba lamps. A sacred turmeric thread or yellow thread is placed in front of both the lamps or tied in the center.

Knot the yellow thread in nine places along with a flower. Keep the tied thread, betel leaves, and betel nuts in front of the lamp. The normal lamps in the puja room are decorated in the normal way.
For each women or girls ,One pair of kalikamba lamps should be made.

PROCEDURE:
1. Mangala Snaanam
2. Thulasi Pooja
3. Hosthilu Pooje -(Draw a rangoli, apply turmeric and vermilion to the Hostilu)
4. Bheemana /Divasi Pooja 
5. Naivedya
6. Aarathi
7. Thamboola
Deevasi  Puja
The Kalikamba lamps are worshipped on the day. An archana with turmeric and kumkum is performed. Any slokas dedicated to Shiva and Parvati is recited. You can also read  the story associated with Deevika Amavasya. While reading the kathe, hold the dosa ladle on the lamp lit(thembittu deepa), The black colored substance will appear, collect it and add cold ghee to this and is to be applied on the eyes after Aarthi

Naivedya
Nivedya is offered and it includes coconut, betel leaves, betel nuts, fruits, bananas and Sweets made.

Aarthi
An arati using sodalu and Karpura is performed. Sacred yellow thread is tied on the right hand wrist.
Elder male members bless the females in the house.

Thamboola
Betel leaves, sweets, fruits are distributed among female friends and relatives. After Marriage women performing pooja for 9 years should give 9 betel leaves,with 9 betel nuts and 9 kaduvu(Kolakatta) for one elder sumangali for 9 years.

Next Day
The mud kalikamba lamps are placed under the Tulsi plant or dissolved in water and the water is poured under a plant in the garden.
Married women observe Bheema Ammavasi for nine years after marriage. If they have the kalikamba lamps, it is gifted to a newly married woman or women who are performing the Bheemana Amavasya


This year Deepasthambha Puja 2020 falling on 20th of July Monday.
In next few days I will update some prepartion photos too. So office goers, can prepare on Sunday itself  something. Then Monday while going to office can do pooja relaxly.


Written by
Smt. Chandrika Arvind




Tuesday, July 14, 2020

காமிக ஏகாதசி/ Kaamika ekadhashi



🌻🌻🌻🌻🌻 காமிக ஏகாதசி 🌻🌻🌻🌻🌻

16/07/2020 ஏகாதசியின் பெயர் "காமிக ஏகாதசி" என்றழைக்கப்படுகிறது. அப்படி என்ன இந்த சிறப்புகள் இந்த காமிக ஏகாதசியில் உள்ளது? அதன் வரலாறு என்ன? இந்த ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் தான் என்ன? என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்வோமா?

🌹🌹 கிருஷ்ணனை நமஸ்கரிக்கும் யுதிஷ்டிரர் :-

காமிகா ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி "பிரம்மவைவர்த்த புராணத்தில்" பகவான் கிருஷ்ணருக்கும், யுதிஸ்டிரருக்கும் இடையேயான உரையாடலில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் ஆடி மாதம்(ஆஷாட மாச) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசி பற்றி அறிய விரும்புகிறேன். என் மீது கருணை கொண்டு, அதனைப் பற்றி எனக்கு விரிவாக எடுத்துரையுங்கள் என்று யுதிஷ்டிரர் கிருஷ்ணரிடம் கூறினார்.

பகவான் கிருஷ்ணர் கூறியதாவது, "தர்மத்தை எந்நிலையிலும் விடாது காக்கும் யுதிஷ்டிரா, ஒருவனது அனைத்து பாவங்களையும் அழித்து, சுப நிகழ்வு ஏற்படுத்தக்கூடிய இந்த ஏகாதசி விரதத்தின் மகிமைகளைச் சொல்கிறேன்.கவனமாகக் கேள்" என்று கூறிவிட்டு பின்வருமாறு கூறினார். 

🌷🌷 கிருஷ்ணர் கூறியது :-

ஒருமுறை நாரத முனிவர், பிரம்மாவிடம் இந்த ஏகாதசியின் மஹாத்மியத்தை பற்றி எடுத்துச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். நாரதர் தனது தந்தையை நோக்கி, "தண்ணீரில் பிறக்கும் தாமரை மலரின் மீது, அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப் போலக் காட்சி அளிப்பவரே, அனைத்து உயிர்களைக் காக்கும் வல்லமை பெற்றவரே, மைந்தனான எனக்கு ஆடி மாதம் (ஆஷாடா மாச) வரும் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர் என்ன? அப்புண்ணிய தினத்தன்று வழிபட வேண்டிய கடவுளைப் பற்றியும், கடைப்பிடிக்க வேண்டிய விரத வழிமுறைகளையும், விரதம் மேற்கொள்வதால் கிட்டும் நற்பலன்களையும் விரிவாக எடுத்துச் சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.

பிரம்மா தன் மகனிடம் "அருமை மகனே! நாரதா! இவ்வுலகத்தின் நன்மைக்காக நீ தெரிந்து கொள்ள விரும்பிய இந்த ஏகாதசி பற்றி விரிவாகச் சொல்கிறேன், கவனமாகக் கேள் என்றார்.

ஆடி (ஆஷாடா) மாதத்தில் வரும் கிருஷ்ணபட்சத்தில் "காமிகா ஏகாதசி" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மிகவும் புண்ணியமானது இந்த ஏகாதசி. காமிகா ஏகாதசியின் மகத்துவம் சொல்லில் அடங்காதது. அது என்ன சொல்லில் அடங்காதது??? இந்த ஏகாதசியின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் என்பது பொருள்).

🌺 இந்த ஏகாதசியின் மஹாத்மியத்தை வெறும் காதால் கேட்பவர்களே, "அஸ்வமேத யாகம்" நடத்திய பலனை பெறுவர் என்றால்? இதன் மகிமையை நாமே உணர்ந்து கொள்ளலாம்.

🍁 சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய நான்கு திவ்ய ஆயுதங்களையும் தன் திருக்கரங்களில் ஏந்தி "கதாகரன்" என்ற திருநாமத்தாலும், ஸ்ரீதரன், ஸ்ரீ ஹரி, ஸ்ரீ விஷ்ணு, மாதவன், மதுசூதனன் என்ற மற்ற திருநாமங்களாலும் போற்றப்படும் மஹாவிஷ்ணுவை வணங்குவோர்க்கும், அவரது பாதார விந்தங்களே சரணாகதி (அதாவது பாதத்தை சரணாகதி அடைபவர்கள்) என்று தியானிப்போர்க்கும், நிச்சயமாக பெரும் நற்பலன் கிட்டும்.

🌾🌾 காமிகா ஏகாதசியின் பலன்கள் :-

🌻காமிகா விரதத்தின் மகிமையைக் காதால் கேட்டாலே "அஸ்வமேத யாகம்" செய்த பலன் கிடைக்கும்.

🌻காமிகா ஏகாதசியன்று மஹாவிஷ்ணுவிற்குச் செய்யப்படும் பூஜை, ஆராதனை ஆகியவை ஒருவருக்கு, "புண்ணிய ஷேத்திரமான, காசியின் கங்கையில் நீராடுதல், நைமிசாரண்ய வனத்தில் நீராடி இறைவனை வழிபடுதல், அல்லது பூமியில் மஹாவிஷ்ணுவான என்னை மூலவராக வழிபடும் கோவிலின் திருக்குளங்களில் நீராடி வழிபடுதல் ஆகியவற்றால் கிடைக்கக்கூடிய அருளாசிகளை விட பன்மடங்கு மேலான புண்ணியத்தைத் தரவல்லது, அருளையும் பெற்றுத் தரக்கூடியது இந்த "காமிக ஏகாதசி".

🌻பனி சூழ்ந்த இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் தரிசனம் அல்லது சூரிய கிரகணத்தின் போது குருஷேத்ரத்தில் புண்ணிய நீராடுதல் அல்லது பூமியையே தானமாக அளிப்பதால் கிட்டும் பலன்கள் அல்லது பூஜைக்குரிய விஷ்ணு மூர்த்திகளாக கருதப்படும் சாளக்கிரமங்களை தன்னுள்ளே கொண்டுள்ள கண்டகீ நதியில் நீராடுதல், அல்லது சிம்ம ராசியில் குரு பகவான் கோட்சாரம் செய்யும் காலம், சோமவார பூர்ணிமா தினத்தில் கோதாவரி நதியில் நீராடுதல் இவை அனைத்தையும் செய்வதால் கிட்டும் நற்பலனை விட ஆடி மாதம், கிருஷ்ணபட்சத்தில் வரும் காமிகா ஏகாதசி விரதத்தை அதற்குரிய வழிமுறைப்படி மேற்கொள்வதுடன், அன்று பகவான் கிருஷ்ணனை ஆராதனையுடன் வழிபடுவது மிக அதிக நற்பலனைத் தந்தருளும் இந்த "காமிக ஏகாதசி".

🍁 இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மையானது, பால் சுரக்கும் பசுவை கன்றுடனும், தீவனங்களுடனும் தானமாக அளிப்பதால் உண்டாகும் நற்பலனுக்குச் சமமானது.

🍀 இந்த காமிக ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் வைகுண்டத்திற்குச் செல்வார்கள்.

🌹 இந்த தினமானது மற்ற தினங்களை விடவும் பவித்ரமான நாளாகும்.

🌻 நாரதா! ஸ்ரீ ஹரியே, எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணரே இந்த ஏந்த ஏகாதசி விரதத்தைப் பற்றிக் கூறும் போது, "காமிகா ஏகாதசியன்று விரதத்துடன் உபவாசம் இருப்பதால் கிடைக்கும் புண்ணியம், பக்தி இலக்கியங்கள் அனைத்தையும் படிப்பதால் கிட்டும் புண்ணியத்தை விட பன்மடங்கு மேலானது" என்று அருளியுள்ளார்.

🌺 காமிகா ஏகாதசியன்று விரத வழிமுறைகளின் படி உபவாசம் இருந்து, இரவில் கண் விழித்து ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மகிமையை விளக்கும் புராணங்களை பாராயணம் செய்பவர் யமதர்மராஜனின் கோபத்திற்கு ஒரு போதும் (எப்போதும்) ஆளாக மாட்டார்கள். 

🍁 அவர்கள் பிறப்பு, இறப்பு என்ற மாயச் சக்கரத்திலிருந்து விடுபட்டு மறுபிறப்பில்லா நிலையை அடைவர் என்பது நிச்சயம்.

🍀 முனிவர்களும், யோகிகளும் இந்த விரதத்தை மேற்கொண்டு உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.

🌸 ஆகவே, நாமும் நம்மால் இயன்றவரை விரதமிருப்பது நல்லது. 

🌻 பகவான் ஸ்ரீமந்நாராயணரை துளசி இலைகளால் வணங்குவோர் தன்னுடைய பாவத்தின் விளைவுகளிலிருந்து விடுதலை அடைவார்கள்.

எப்படி தாமரை இலையானது தண்ணீரில் இருந்தாலும், தண்ணீருடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறதோ!!! அதே போல அவர்கள் பாவங்கள் தீண்டாமல் வாழ்வார்கள்.

🌹 எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணருக்கு அன்று பவித்ரமான ஒரு துளசி இலையை சமர்ப்பித்து பூஜிப்பவர் அடையும் புண்ணியமானது, ஒருவர் 200 கிராம் தங்கம், 800 கிராம் வெள்ளி தானம் செய்வதால் அடையும் புண்ணியத்திற்குச் சமமானது இந்த ஏகாதசி. 

🌴 முத்து, பவளம், மாணிக்கம், புஷ்பராகம், வைரம், வைடூரியம், கோமேதகம் போன்ற விலைமதிப்பில்லாத கற்களினால் செய்யப்படும் பூஜையை விட பவித்ரமான துளசி இலைகளால் மட்டும் செய்யப்படும் பூஜையானது பகவான் விஷ்ணுவிற்கு மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது.

🌺 துளசி தேவிக்கு (துளசி மாடம்) தினம் அணையாமல் எரியும் நெய் விளக்கேற்றி பூஜிப்பவரின் புண்ணியக் கணக்கை சித்ரகுப்தனாலும் கணக்கிட இயலாது. பவித்ரமான காமிகா ஏகாதசி பகவானுக்கு மிகவும் பிரியமான நாளாகும். ஆகையால் அன்று முன்னோர்கள் அனைவரும் நெய் விளக்கேற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு சுவர்க்கத்தை அடைந்து அமிர்தத்தை அருந்தும் பாக்கியம் பெற்றனர். 

🍀 எவரொருவர் இன்று நெய் அல்லது எள் எண்ணையினால் விளக்கேற்றி ஸ்ரீ கிருஷ்ணரை பூஜித்து ஆராதிக்கிறாரோ, அவர் தன் பாவங்களிலிருந்து விடுதலை பெற்று, முடிவில் சூரியனின் வாசஸ்தலமான சூரிய மண்டலத்தை பத்து மில்லியன் விளக்குகளின் பிரகாசத்திற்கு சமமான பிரகாச உடலுடன் அடைவர்.

🐚 இந்த ஏகாதசி மிகவும் பவித்ரமானதாகும். உபவாசம் இருக்க இயலாதோர் இங்கு குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினாலே, தங்கள் முன்னோர்களுடன் ஸ்வர்க்கம் அடைவர்". இவ்வாறு பிரம்மதேவர் காமிக ஏகாதசி விரதத்தைப் பற்றி நாரதருக்குக் கூறினார்.

🌾🌾 கிருஷ்ணர் கூறுவது :-

யுதிஷ்டிரரிடம் இதைக் கூறிய கிருஷ்ணர் "யுதிஷ்டிரா, பாவங்களை நீக்கி, எண்ணில்லாத பலன்களை வழங்கும் காமிகா ஏகாதசியின் பெருமைகளை, பிரஜாபதி பிரம்மா தனது புதல்வன் நாரதருக்கு உரைத்ததை அப்படியே நான் உனக்கு உரைத்துள்ளேன்".

இப்புனித காமிக ஏகாதசி விரதமானது பிராமணனை கொன்றதால் உண்டான பாவம் (பிரம்மஹத்தி தோஷம்), கருவில் வளரும் குழந்தையை அழித்த பாவம் போன்ற கொடிய பாவத்திலிருந்து நிவர்த்தி அளிக்கும் பேறு பெற்றது.

இந்த விரதம் அதிக புண்ணியத்தை அளிக்க வல்லது. எனவே, இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போர் பக்தியில் சிறந்து விளங்குவர்.

அப்பாவிகளைக் கொல்வதால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷம், சிசு ஹத்தி தோஷம், பக்தியான் மற்றும் களங்கமில்லாத பெண்ணைக் கொன்ற பாவங்களின் விளைவுகளிலிருந்து காமிகா ஏகாதசியின் மஹாத்மியத்தைக் கேட்பதால் நிவர்த்தி பெறலாம்.

ஆனால், இதைக் கொண்டு ஒருவர் முதலில் கொலைப் பாதகம் புரிந்து விட்டு பின்னர் காமிகா ஏகாதசியின் மகாத்மியத்தைக் கேட்பதால் நிவர்த்தி பெறலாம் என்று நினைக்கக் கூடாது. அது தவறானது. அறிந்தே கொலை பாதகம் போன்ற கொடிய பாவங்களைப் புரிவதற்கு எந்த சாஸ்திரத்திலும் மன்னிப்பே கிடையாது என்பதை ஞாபகத்தில் இருத்தவும்" என்றார்.

எவரொருவர் பவித்ரமான இந்த காமிக ஏகாதசியின் பெருமையை விவரிக்கும் மஹாத்மியத்தை பக்தியுடனும், சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் கேட்கிறாரோ, அவர் தன் பாவத்திலிருந்து விடுபட்டு மஹாவிஷ்ணுவின் வாசஸ்தலமான விஷ்ணுலோகம் அடைவர், என்று பகவான் கிருஷ்ணர் யுதிஷ்டிரருக்கு காமிக ஏகாதசி விரத மஹாத்மியத்தைக் கூறி முடித்தார்.

ப்ரஹ்ம வைவதர்த்தன புராணம், *ஆஷாடா (ஆடி) மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசி* அதாவது காமிகா ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் படலம் முடிவுற்றது.

"ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ!!! ஓம் நமோ நாராயணாய நமஹ!!!".

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

Monday, June 29, 2020

Deva sayani ekadashi story







தேவசயனி ஏகாதசி - ஆஷாட ஏகாதசி.....!!!
(1.07.2020)

தேவசயன ஏகாதசி  ஆனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியாகும்.

தேவர்களுடன் சயனத்திற்கு பகவான் விஷ்ணு செல்லும் நேரமாக இந்த ஏகாதசி வரும் நேரம் இருப்பதால் இந்த ஏகாதசிக்கு தேவசயன ஏகாதசி எனப் பெயர் வந்தது. தேவர்கள் சயனத்திற்கு செல்லும் நேரமாக இருப்பதால் இந்த ஏகாதசி விரதத்திற்கு பிறகு வைதீக காரியங்கள் சிறிது நாட்களுக்கு நடப்பதில்லை.(தேவர்கள் ஹோமத்தில் அளிக்கும் அன்னத்தை உண்ண வர மாட்டார்கள். இது அவர்கள் உறங்கும் வேளை).

தேவசயன ஏகாதசிக்கு பத்ம ஏகாதசி என்றும் ஆஷாட ஏகாதசி என்றும் பெயர் உண்டு. மகாராஷ்டிர மாநிலத்தில் இதனை ஆஷாட ஏகாதசி என அழைத்து இந்த நாளில் பண்டரிபுரம் சென்று விட்டலனை வழிபடுகிறார்கள். மற்ற வட இந்திய மாநிலங்களில் இன்றைய தினம் கோதாவரி நதியில் நீராடி காலா ராமர் கோவில் சென்று வழிபடுகிறார்கள்

ஆஷாட ஏகாதசி மராட்டியர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.

மராட்டிய பக்தர்களும் சாதுக்களும் ஆன ஞானேஷ்வரர் ,துக்காராம் ஆகியோர் தங்கள் கிராமங்களில் இருந்து பாதயாத்திரையாக 15 நாட்கள் நடந்து ஆஷாட ஏகாதசி அன்று பண்டரிபுரம் சென்று விட்டலனை வணங்கினர்.

இதனை கொண்டாடும் விதமாக பக்தர்கள் இந்த சாதுக்களின் உருவ சிலைகளை பல்லக்கில் தூக்கிக் கொண்டு பாத யாத்திரை மேற்கொண்டு ஆஷாட ஏகாதசி அன்று  பண்டரிபுரம் அடைந்து விட்டலனை வழிபடுவது வழக்கம்.

சயனி ஏகாதசி கதையை பகவான் கிருஷ்ணன் தருமருக்கு எடுத்து  சொல்லும் போது அதனை நாரதருக்கு பிரம்மா எடுத்து சொல்லியதாக கூறினார்.

பிரம்மா சொன்ன கதையாவது:

முன்னொரு காலத்தில் மந்தாதர் என்னும் அரசர் செம்மையாக இராஜிய பரிபாலனம் செய்து வந்தார். அவரின் அரசாட்சியில் குடிமக்கள் குறையில்லா வாழ்வு வாழ்ந்தார்கள். அரசரும் முறை தவறாத ஆட்சி மேற்கொண்டார். ஒரு தடவை வறட்சியும் பஞ்சமும் மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து இருந்து குடிமக்களை வாட்டி வதைத்தன. மக்கள் வழி தெரியாது மன்னனிடம் முறையிட்டனர்.

மன்னனும் காரணம் அறியாது கலங்கினார். அவருக்கு தெரிந்த வரை அவர் ஒரு தவறும் இழைக்கவில்லை. தனது சேனைகளையும், பரிவாரங்களையும் கூட்டிக் கொண்டு காடு காடாக சென்று சாதுக்களை தரிசித்தார். எங்காவது ஒரு வழி கிடைக்குமா எனத் தேடினார்.

இவ்வாறு  பிரயாணம் செய்த நேரத்தில் ஆங்கிரஸ முனிவரை மன்னன் தரிசித்தார். அவரிடம் தனது  கஷ்டத்தை அவர் எடுத்து  கூறிய போது, முனிவர் தனது  தவ வலிமையால் கண்டறிந்து மன்னனின் ராஜ்யத்தில் பிராமணன் இல்லாத ஒருவன் வேள்வி யாகங்களில் ஈடுபட்டதன் பலனே இது என உரைத்தார். அவனை கொன்றுவிடும்படி மன்னனிடம் கூறினார்.

கொல்லும் அளவுக்கு இது பெரிய குற்றமில்லை என்பதால் மன்னன் அதனை மறுத்து வேறு உபாயம் கேட்டார். முனிவரும் சயன ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னார். பிரச்னை தீரும் என்றார். நாடு திரும்பிய மன்னன் தன் பிரஜைகளையும் தேவ சயன ஏகாதசி விரதம் இருக்க சொன்னான். விளைவாக நாட்டில் வரட்சியும், பஞ்சமும் நீங்கியது. சுபிக்ஷம் ஏற்பட்டது.

சயன ஏகாதசி விரத பலன்கள்:

தேவ சயன ஏகாதசி விரதமிருந்தால் எந்தொரு பாபமாக இருந்தாலும் தொலையும்.

ஆன்மீக சக்தி  அதிகரிக்கும். அதில் ஒரு முழுமை கிடைக்கும். நடுவில் இருக்கும் தடை கற்கள் நீங்கும்.

பாபத்தினால் விளையும் தீமைகள் மறையும். வாழ்வு வளம் பெரும்.

இப்படியாக கிருஷ்ண பரமாத்மா தருமருக்கு தேவ சயன ஏகாதசியை பற்றி எடுத்தியம்பியதாக பவிஷ்ய உத்தர புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது.


ஹரே கிருஷ்ணா!!!!

Sunday, June 28, 2020

Mudra dharane slokagalu





Chakra Mudra

sudarshana mahajwala kotisoorya samaprabha |
agnandhasyame nithyam vishnOrmaargam pradarshaya ||




Shanka mudra

paanchajanya nijadhwana dvamstapaathaka namchaya |
traahimaam paapinam GorasamsaaraarNava paatyinam ||

Thursday, June 18, 2020

Swarna Gowri Vratha Pooja

 Swarna Gowri Vratha


This vratha pooja is performed to appease Parvathi devate. It is performed by married women to keep their husband healthy and safe while unmarried women perform this pooja to get a good husband.


Key Insights :

Performed to get a good life partner.

All boons and desires are fulfilled.

Performed on Bhadrapada Shukla tritiya.


Main deity: Goddess Parvati.




Swarna Gowri Vratha Pooja  is also famously known as “Gowri Habba”, and is dedicated to Parvathi devate. It’s said that on this day Parvathi devate goes to her maternal home and the next day Ganesha devaru comes to take her back to Kailash. This vratha pooja is done by women to get a good husband, get material prosperity and long life for their spouse.


Swarna Gowri Vratha Pooja is performed by invoking Parvathi devate in the form Arshina Gowri or Mannu/Usuvina Gowri and the mantras are and the pooja is continued as per shastras and vidhana to get the blessings of Goddess Gowri.


When to Perform Swarna Gowri Vratha Pooja ?

This Vratha is usually done on Bhadrapada Shukla Tritiya, on the third day of bhadrapada month and is usually celebrated a day before Ganesh Chaturthi.


Benefits of Swarna Gowri Vratha Pooja :

Performing this vratha with devotion helps the woman to get a very good husband who will be along with her in all good and bad times together.

Persons is blessed with good health and prosperity by doing this pooja with great devotion.



Swarna Gowri pooja is celebrated on Badrapad thruthiya a day before Ganesh Chaturthi. Goddess Gowri, wife of Lord Shiva, the mother of Lord Ganesha and Lord Subramanya is worshiped throughout India. However Gowri Habba is a very significant festival in Karnataka, Andhra Pradesh and Tamil Nadu. Goddess Gowri is welcomed at her parents house. The next day Lord Ganesha, her son comes as if to take her back to Kailasa.


Swarna Gowri Vratha

On this day, Hindu women and young girls often buy new clothes and wear their traditional attire for the occasion. They make Arishinadagauri (a idol of Gowri made of turmeric) for the Puja. These days ready-made beautifully painted and decorated clay idols of Goddess Gowri can be bought along with Ganesha statues, at the market. 



In our house we have thoddu gowri/ usuvina gowri. My mother in law's mother in law bought some holy sand from Sea and make a bundle like in yellow cloth and kept that bundle in the kalasha. And alankara , pooje and everything is done to that usuvina gowri.


A Mantapa is generally decorated with mango leaves and flowers. Usuvina gowri is decorated with vastra (16 alle gejje vastra), flower garlands. A silver Kalasha is decorated with turmeric and kumkuma. The vessel filled with water has kumkum, turmeric, akshathe coin added to it.



The inner rim of Kalasha is decorated with betel leaves. A coconut is smeared with turmeric and kumkum on the mouth of the pot. Rangoli is drawn before placing the Kalasha on a plate or tray which has uncooked rice spread on it. The goddess gowri is mounted in a plate decorated with flowers, and ladies get their ‘gauridaara’ (a sacred thread with 16 knots ) tied to their right wrists, as blessings of Gowri and as part of the vratha. As is customary, we first worship the Ganesha idol before any other pooja. For goddess Gowri, we start with Gowri ashtotra, narrate or read the story of Gowri, do the ‘Mangalrathri’ and take the blessings of goddess Gowri.



Gowri Baginna

At least 5 baginnas are prepared as part of the vratha. Each baginna usually contains a packet of arshina (turmeric), kumkuma(vermilion) , bangles, black beads (used in the mangalsutra), a comb, a small mirror, bale bicchole, coconut, blouse piece, 5 types of fruits, 5 types of vegetables. Dhaanya (cereal), rice, tur dal, green dal, wheat or rava and jaggery cut in a cube form. The baginna is offered in a traditional mora (winnow painted with turmeric). One such bagina is offered to Goddess Gowri and set aside. The remaining Gowri baaginas are given to married women.


Another specialty of this festival is that the ‘Ammana  maneyavaru’ (the married woman’s parents or brothers) send money as representation of mangaladravya or sarees as gifts.



Gowri Festival Food Menu Items : 

In South India sweet like Obattu, payasa, chitranna and Bajji, Kosumbari are prepared and offer to the family and friends gather for a traditional. It continues to the next day with the celebrations for Lord Ganesha’s Festival.

Tuesday, June 02, 2020

மஹா லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்கள்

மகாலட்சுமி இருக்கும் 26 இடங்கள்
செல்வத்தின் அம்சமாக, பெண்களின் சொரூபமாகவும் விளங்கும் மகாலட்சுமி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்..

அந்த 26 இடங்கள் எவை என்று பார்க்கலாம்.

1. திருமால் மார்பு:

திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன் -ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.

2. பசுவின் பின்புறம்:
பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப் பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். ‘யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை’ என்றார் திருமூலர்.

3. யானையின் மத்தகம்:
யானையின் மத்தகம் பிரணவம் போன்றது (ஓங்காரம் போன்றது). அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.

4. தாமரை:
மலர்களில் சிறந்தது தாமரை. ‘பூவெனப்படுவது பொறிவாழ் பூவே’ என்றும், ‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’ என்றும் கூறுவர். தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆதலின் அவளை மலர்மகள் என்பர்.

5. திருவிளக்கு:
விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆதலின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.

6. சந்தனம்:
மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியஙக்ளில் சந்தனம் அவசியம்.

7. தாம்பூலம்:
தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள்.

8. கோமயம்:
பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர். ‘ஐந்தாடுவான் அரன்’ என்பார் அப்பர். வாயிலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினால் கிருமிகள் வாரா, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் வராது. பஞ்ச கவ்யம் பரம ஒளஷதம் என்பர்.

9. கன்னிப்பெண்கள்:
தூய கன்னியர் தெய்வ நலம் பொலிபவர். அவர்களிடத்து லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வது உலக வழக்கு.

10. உள்ளங்கை:
உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். காலையில் எழுந்ததும் கையைப் பார்க்க வேண்டும். கையை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது. கையால் உழைத்தால்தான் தனலட்சுமியைக் காண முடியும். கை என்றாலே சக்தி என்றுதான் பொருள். அவர் பெரிய கை என்றால் அவர் செல்வமுடையவர் என்று பொருள்.

11. பசுமாட்டின் கால்தூசு:
புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் நில்லாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். மாடு என்றால் செல்வந்தானே!

12. வேள்விப்புகை:
வேள்விப் புகை உயிர் காக்கும். போபாலில் வேள்வி நடந்த இரு வீடுகளுக்குள்ளே நச்சுக்காற்று நுழையவில்லை. வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப் புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும்.

13. சங்கு:
சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. நிதியின் ஓர் அளவை சங்கம் என்பர். ‘சங்கநிதி... பதுமநிதி இரண்டுந்தந்து’ எனும் நாவரசர் சொல் உணர்வோம்.

14. வில்வமரம்:
வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றி னாள். வில்வம் சிவபெருமானுக்கு உகந்த பத்திரம். அதைவிடச் சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை. வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில் தல விருட்சம் வில்வம், திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை. வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.

15. நெல்லி மரம்:
நெல்லி ஆயுளை வளர்க்கும்: ஆரோக்கியம் தரும். அதனடி யில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லிதிருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசிப் பலன் உண்டு.

16. தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்

17. வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம்

18. கலகமில்லாத மகளிர் வாழும் இடம்

19. தானியக் குவியல்

20. கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்

21. பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்

22. பகிர்ந்துண்டு வாழும் மனிதர்

23. நாவடக்கம் உள்ளவர்

24. மிதமாக உண்பவர்

25. பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்

26. தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களிலும் மனிதர்களிடத்தும் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறார். 🙏 🙏

Sunday, May 31, 2020

Nirjala Ekadashi

*நிர்ஜல_ஏகாதசி 2/6/2020*

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

*பாண்டவ நிர்ஜல ஏகாதசி' விரத மகிமை*

'ஜேஷ்ட மாதம்', (May / June)  வளர்  பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி" (Paandava Nirjala Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது.

*நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த புராண' விளக்கம்:*

ரிஷிகளில் முதன்மையான ஶ்ரீ வியாஸரிடம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது  "அன்பர்களுக்கு

ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளிள் ஒருவரான பீமசேனன், தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாசரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்...

ரிஷிகளில் சிறந்த எமது பாட்டனாரே, உங்களுக்கு எனது நமஸ்காரம். வெகு நாட்களாக என் மனதில் இருக்கும் ஐயத்தைத் தீர்த்து வைக்க வேண்டுகிறேன். எமது தாய் குந்தி தேவி, எனது உடன்பிறந்தவர்கள் யுதிர்ஷ்டிரர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மற்றும் பாஞ்சாலி இவர்கள் அனைவரும் பிரதி ஏகாதசி தோறும் விரதம் இருக்கின்றனர். ஏகாதசி விரதத்தை முறையாக கடைபிடித்து பகவான் வாசுதேவரை மகிழ்வித்து அவரது ஆசிர்வாதத்திற்கு உரியவர்கள் ஆகின்றனர். மேலும், என்னையும் ஏகாதசி விரதத்தை முறைப்படி இருக்க வலியுறுத்துகின்றனர்.
நான் பகவான் விஷ்ணுவை மனதார பூஜிப்பேன், அவருக்கு உண்டான பூஜைகள் அனைத்தையும் கூட செய்வேன், ஆனால் என்னால் ஒரு வேளை கூட உணவு உண்ணாமல் இருக்க முடியாது. வாயுதேவரின் புத்திரனான 'சமானப்ராணா' (எந்த பொருளையும் செரிமானம் செய்யக்கூடிய வாயு) எனது வயிற்றில் உள்ளது.  அதனால் என்னால் பசி தாங்க இயலாது. ஆகவே, பாட்டனார் அவர்களே, ஏகாதசி விரதம் கடைபிடிக்காமல் இருந்து, நான் முக்தி அடையும் யுக்தியை எனக்கு கூறுவீர்களாக, என்று பீமசேனன், ஸ்ரீ வியாச ரிஷியிடம் கேட்கிறார்.

இதனைக்கேட்ட வியாசரிஷி, பீமா, நீ நரகத்திற்கு செல்லாமல் இருந்து சொர்க்கத்திற்கு  மட்டுமே செல்லவேண்டும் என்றால், பிரதி மாதம் இரண்டு ஏகாதசி விரதமும் கடைபிடித்தே ஆக வேண்டும் என்று கூறுகிறார்.

பீமன், மீண்டும் எடுத்துரைக்கிறார்... ஓ பாட்டனாரே, தயவு செய்து எனது நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்... என்னால் ஒரு வேளைகூட உண்ணாமல் இருக்க முடியாது, நான் எப்படி வருடம் முழுவதும் 24 ஏகாதசி விரத நாட்களில் மூன்று வேளையும் உண்ணாமல் இருக்க முடியும் ??? வ்ரிகா  (Vrika) எனும் அக்னி எனது வயிற்றில் உள்ளது.  நான் முழுவதும் உண்டால் மட்டுமே, எனது வயிற்றில் உள்ள அந்த அக்னி அடங்கும், என்று மீண்டும் கூறுகிறார்...

இந்த இடத்தில், அக்னி பற்றி ஒரு சில வரிகளில் பார்த்துவிடுவோம்...பொதுவாக அக்னி மூன்று வகைப்படும். 'தவாக்னி' - மரங்களை எரிப்பதன் மூலம் வருவது. 'ஜாடராக்னி' - நமது வயிற்றின் உள்ளே இருந்து நாம் உண்ணும் அனைத்தையும் செரிக்க வைக்கக் கூடியது. , 'வடவாக்னி' - இது சூடான மற்றும் குளிர்ந்த பனி ஒரே நேரத்தில் உராயும் பொழுது வரக்கூடியது, குறிப்பாக கடலின் மேல் ஏற்படும்.
இதில், ஜாடராக்னியின்   உச்ச பட்ச விளைவாக, 'வ்ரிகா' எனும் எதனையும் உடனே செரிமானம் செய்யக்கூடிய அக்னி வடிவம் தான் பீமனின் வயிற்றில் இருந்தது. அதன் காரணமாகத்தான், மற்ற அனைவரையும் விட 100 மடங்கு அதிகம் சாப்பிட்டாலும் கூட, அவை உடனே செரிமானம் ஆகிவிடக்கூடிய வாய்ப்பு பீமனுக்கு இருந்தது.

சரி மீண்டும் புராணத்தினுள் நுழைவோம்...
பீமன், தனது பாட்டனாரிடம் மன்றாடுகின்றார்; தயை கூர்ந்து எனது நிலையைப் புரிந்து கொண்டு எனக்கேற்றார் போல ஒரே ஒரு ஏகாதசி விரதத்தை சொல்லுங்கள், அன்று ஒரு நாள் மட்டும், நான்  முழுவதும் உண்ணாமல் இருக்க முயற்சி செய்கிறேன் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறார்.

பீமனின் நிலை, ஏற்கனவே ஶ்ரீ வியாசருக்கு நன்றாகத் தெரியும், இருப்பினும், பீமனைப்போன்று கலியுகத்திலும் பலர் எல்லா ஏகாதசி நாட்களிலும் விரதம் இருக்கும் வாய்ப்பு இல்லாமல் இருப்பர் என்பதை மனதில் எண்ணி, பீமனுக்கு உபாயம் கூறுவது போல நமக்கும் உபாயம் அருளினார்...
வியாச மகரிஷி என்ன உபாயம் கூறினார் ?

ஓ, பீமா, நான் உங்கள் அனைவருக்கும் வேத சாஸ்திர நெறிமுறைகளையும், பூஜா விதிகளையும் மற்றும் அனைத்து புராண விளக்கங்களையும் கூட கூறியுள்ளேன்.  இருப்பினும், அடுத்து வரக்கூடிய கலியுகத்தில், இதனை அனைவரும் முறையாகக் கடைப்பிடித்து நரகத்தை தவிர்த்து சொர்க்கத்திற்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவே...அதற்கு எளிய உபாயமாகத்தான் பிரதி சுக்ல பட்ச ஏகாதசி மற்றும் கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் மானுடர்களுக்கு வரப்பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. நீ அதிலும் விதிவிலக்கு கேட்டு ஒரே ஒரு ஏகாதசியை சொல்ல சொல்கிறாய். ?!
சரி, உன்னைப்போன்று ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், சூரியன் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பயணிக்கக்கூடிய ஜேஷ்ட மாதத்தில் (May / June) சுக்ல பட்சத்தில் வரக்கூடிய  ஏகாதசி விரதத்தை, உண்ணாமல் மட்டும் அல்ல, ஒரு துளி நீர் கூட அருந்தாமல் இருந்து கடைபிடிக்க வேண்டும்.

('நீர் கூட அருந்தாமல்' என்று பொருள் படுவதால் இது "நிர்-ஜல" ஏகாதசி என்று ஆயிற்று...) இந்த விரத நேரமானது ஏகாதசி அன்று காலை சூர்ய உதயம் முதல் மறுநாள் 'துவாதசி' காலை சூர்ய உதயம் வரை ஆகும்.
பின்னர், துவாதசி அன்று காலை குளித்த பின்னர்  பகவான் விஷ்ணுவை பிரார்த்தனை செய்துவிட்டு, அந்தணருக்கு தங்கம் அல்லது வேறு வஸ்திரம் தானம் செய்துவிட்டு (அல்லது அவரவர்க்கு முடிந்த வரையில் ஏதாவது ஒரு குடை, செருப்பு, கைத்தடி அல்லது முடிந்த  அளவு பணம் தானம் செய்துவிட்டு) அதன்பின்பு கண்டிப்பாக அவருக்கு நீர் அருந்தக் கொடுத்து அதன் பின்னர் அவருக்கும் உணவளித்து, தானும் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று  வியாச மகரிஷி பீமனுக்கு உபாயம் கூறி அருளினார்...

*நிர்ஜல ஏகாதசியின் பலன்கள் என்ன ?*

மேலும், வியாச மகரிஷி தொடர்ந்து கூறுகையில், ஓ வாயுபுத்திரனே, இப்படி நீர் கூட அருந்தாமல் மிகக்கடுமையாக இந்த விரதத்தை கடைபிடித்தால், அவர்களது மலையளவு பாவமும் குறையும். பல்வேறு புண்ய நதிகளில் நீராடிய பலனைப்பெறுவர். மேலும், பிரதி மாதம் சுக்ல பட்ச, கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் இல்லாமல் இருந்தாலும், அதற்கு விரதம் இருந்த பலனையும் சேர்த்து பெறுவர்.

ஓ, 'வ்ருகோதரா' (மிக அதிக விருப்பம் கொண்டு அதிகமாக உண்பவன் என்று அர்த்தம்), இந்த நிர்ஜல ஏகாதசி விரதத்தை கடைப் பிடித்தவர்களுக்கு, தனம், தான்யம், மற்ற அனைத்து செல்வங்களும் தானாக வந்து சேரும். மேலும், அவர்களது இறப்பிற்குப் பின், அவர்களை கூட்டிச்செல்ல யமதூதர்கள் வர மாட்டார்கள், மாறாக விஷ்ணு தூதர்கள் தான் வருவார்கள். அந்த ஆன்மா, விஷ்ணுவின் பாதத்தை அடையும்.
துவாதசியுடன் இணைந்து இருக்கும் இந்த ஏகாதசி நாளில் விரதம் இருந்து, அதன் பின்னர் அந்தணர்களுக்கு அளிக்கும் நீர், குடை, செருப்பு , கைத்தடி ஆகிய தானங்கள், முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்த பலனைத்தரும்.
ஆகவே, பீமசேனா, இந்த 'ஜேஷ்ட சுக்ல ஏகாதசி' அல்லது 'நிர்ஜல ஏகாதசி' விரதத்தை முழு பக்தியுடன் அனுஷ்டித்து, அந்த விஷ்ணுவின் பரமபதத்தினை அடைவாயாக என்று கூறி ஆசி வழங்கினார்...
இவ்வாறு ப்ரம்ம-வைவர்த்த- புராணம் விளக்குகிறது.

பீமன் மூலமாக, நாமும் இந்த அதி உன்னத 'நிர்ஜல ஏகாதசி' விரதத்தினைப் பற்றித் தெரிந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கப்பெற்றோம்.

இவ்வாறு, இதன் பெருமைகளை பீமனிடம் கூறிய ஸ்ரீ வியாசமகரிஷி மேலும் கூறுகையில், ஓ பீமசேனா, இந்த 'நிர்ஜல ஏகாதசி' விரத கதையினை படித்தவர்களும், கேட்டவர்களும் மற்றும் பிறருக்கு எடுத்துச் சொல்பவர்களும் மிகுந்த புண்ய பலனைப் பெறுகின்றனர். அவர்கள், அந்தணர் ஒருவருக்கு 'கோ தானம்' செய்த புண்ய பலனைப்பெறுவர், என்று கூறினார்.

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'நிர்ஜல ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை:

வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.)  வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.

ஶ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து

Saturday, May 16, 2020

அபரா ஏகாதசி/Apara Ekadashi

அபரா ஏகாதசி.......!!!
(18.5.2020)

இதை அசலா ஏகாதசி என்றும் கூறுவர். இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவர் மக்கள் மத்தியில் பெரும் பேரும், புகழும் அடைவதோடு, அளவில்லா செல்வத்தையும் பெறுவர் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.

ஒ யுதிஷ்டிரா ! அபரா ஏகாதசி விரதம் மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகாவிஷ்ணுவை ஓங்கி உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.

இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது இப்பெயர் பெற்றது. மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.

அதோடு இந்த அபரா ஏகாதசி விரத பிரபாவத்தால் பிரம்மஹத்தி, பிறரை நிந்திப்பது, போரில் புறமுதுகிடுதல், குரு நிந்தனை, பைசாச பிறவி, பொய் சாட்சி கூறுதல், ஸ்திரீ கமனம், போலி மருத்துவம் செய்தல், போலி ஜோதிடம் கூறுதல் போன்ற பாவங்களிலிருந்து விடுதலை அளிப்பதோடு அவர்களுக்கு சுவர்க்கப் ப்ராப்தியை அளிக்க வல்லது என்றார்.

3 புஷ்கரங்களில் நீராடுதல், கார்த்திகை மாத புனித நீராடல், கங்கையில் பிண்ட தானம் செய்தல், பத்ரிகாஸ்ரமத்தில் தங்குதல், இறைவன் கேதாரநாதரை தரிசித்து வணங்குதல் இவற்றால் கிடைக்கும் புண்ணியத்தினை இந்த அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைபிடிப்பதால் ஒருவர் அடைய முடியும் என்று கூறினார்.

கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் புனித நீராடி, கஜ தானம், ஸ்வர்ண தானம் செய்தல், சினைப்பசுவினை ஸ்வர்ணம் மற்றும் பூமி தானத்தோடு செய்வதால் அடையும் புண்ணிய பலன்கள் அனைத்தும் இந்த அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைபிடிப்பதால் ஒருவர் அடைய முடியும் என்று கூறினார்.

ஒ யுதிஷ்டிரா ! இந்த விரத மகாத்மியத்தை விளக்கும் கதையினை உனக்கு கூறுகிறேன் கவனமாகக் கேள், என்று கூறத் தொடங்கினார்.

முன்னொரு காலத்தில் மஹித்வஜன் என்னுமொரு அரசன் தன்னுடைய நகரை நல்ல முறையில் அரசாண்டு வந்தான். அவனுக்கு வஜ்ரத்வஜன் என்றொரு சகோதரன் இருந்தான். அவன் மிகவும் கொடூர குணம் கொண்டவனாகவும், நாத்திகனாகவும் விளங்கினான்.

ஒருநாள் வஜ்ரதவஜன், தனது சகோதரன் மீது பொறாமை கொண்டு, இரவில் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவனைக் கொன்று ஊரில் உள்ளதொரு அரசமரத்தின் அடியில் புதைத்து விட்டான். பின்னர் அவன் அரசாட்சியைக் கைப்பற்றினான்.

அபமிருத்யுவின் காரணமாக மஹித்வஜன், ஆவியாக அந்த மரத்தையே சுற்றி அலைந்தான். அந்த வழியாகப் போவோர், வருவோர் அனைவரையும் தொல்லை செய்து துன்புறுத்தினான்.

ஒருநாள் அவ்வழியே வந்த தௌமிய மகரிஷி, மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஹித்வஜனின் ஆன்மாவினைக் கண்டார். அவருடைய தவோபலத்தால் அவனுடைய பிரேத ஜன்மாவிற்கான காரணத்தினை அறிந்தார். அதன் பின்பு அவர் அந்த ஆன்மாவினை அழைத்து அதற்கு தகுந்த புத்திமதிகளைக் கூறி அதனை நல்வழிபடுத்தினார்.

அதனைக் கேட்டு மனம் திருந்திய அந்த ஆவி, இத்தகு கொடிய பிரேத ஜன்மாவிலிருந்து விடுதலை அடைய அவரிடம் மார்க்கம் வேண்டி நின்றது. அதனைக் கேட்ட தௌமிய மகரிஷி, அதற்கு அபரா ஏகாதசியின் விதிமுறைகள், மகாத்மியம் ஆகியவற்றை கூறி அதனை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தினார்.

அதன்படி, மஹித்வஜன் இவ்விரதத்தை கடைபிடித்து அவனுடைய பிரேத ஜென்மம் நீங்கி நன்னிலையை அடைந்தான் என்று பகவான் யுதிஷ்டிரனிடம் கூறினார்.

இந்த அபரா ஏகாதசி விரதமானது பாப விருட்சத்தினை வெட்டி வீழ்த்தும் கோடரியைப் போன்றதாகும். அஞ்ஞானம் மற்றும் பாவத்தினால் இருண்டிருக்கும் உலகத்தினில் ஒளி வீசும் சூரியனைப் போன்றதாகும் என்றார்.

எனவே ஓ யுதிஷ்டிரா ! தனது கர்மவினை பாவங்களைக் கண்டு அஞ்சுபவர் அனைவரும் இந்த விரதத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும் இந்த விரதத்தை கடைபிடிக்காத ஒருவர், ஒரு மகா சமுத்திரத்தில் தோன்றும் பல நீர்குமிழிகள் போன்று ஜனன-மரண சக்கரத்தில் சிக்கி, மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து கொண்டே இருப்பார்கள் என்றார்.

எனவே இந்த அபரா ஏகாதசி விரதத்தினை பக்தி சிரத்தையுடன் கடைபிடித்து இறைவன் திரிவிக்ரமனை வணங்கி வழிபடுவதால் பாவ வினைகள் அனைத்தும் அழிந்து, இறுதியில் வைகுந்தத்தை அடைவர் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் கூறி முடித்தார்.

எனவே நாம் அனைவரும் பெறுதற்கரிய இந்த மனித தேகத்தை இறைவனை வணங்கி வழிபட பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில் நம்முடைய வாழ்கை அர்த்தமற்ற ஒன்றாகி விடும்.

மேலும் எவரொருவர் இந்த நன்னாளில் இவ்விரத மஹாத்மியத்தை சொல்கிறாரோ / கேட்கிறாரோ /படிக்கிறாரோ அவரும் அவருடைய அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு புதுவாழ்வு பெறுவர் என்று பிரம்மாண்ட புராணம் குறிப்பிடுகிறது.

Sunday, May 03, 2020

மோஹினி ஏகாதசி/ Mohini Ekadashi

மோகினி ஏகாதசி
04.05.2020, திங்கட்கிழமை

சித்திரை-வைகாசி  மாதம் சுக்ல பட்சத்தில் வரும்  ஏகாதசி  திதியை மோகினி  ஏகாதசியாக கொண்டாடுவர்.  மோகினி ஏகாதசி விரத  மகிமையை நாம் இப்போது காண்போம்.சுயகட்டுப்பாடு மற்றும் சிரத்தையின் மகத்துவத்தை  விளக்கும் வரூதினீ  ஏகாதசி விரத கதையைக் கேட்ட தனுர்தாரி அர்ஜூனன் பரமாத்மா கிருஷ்ணரிடம்," ஹே கிருஷ்ணா!,சித்திரை –வைகாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசியின்  பெயர், விரதம் அனுஷ்டிப்பதற்கான  விதிமுறை,இவற்றைப்  பற்றி விரிவாக  கூற வேண்டும்." என்று வேண்டினான்.
• ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளிக்கையில்," ஹே பாண்டு நந்தனா! , மகரிஷி  வசிஷ்டர் ஸ்ரீராமனுக்கு கூறிய  ஒரு புராதன கதையை  உனக்கு கூறுகிறேன். கவனத்துடன் கேள்." என்றார்.• ஒரு சமயம்  ஸ்ரீ ராமர் ,மகரிஷி வசிஷ்டரிடம்," குரு  தேவா!,ஜனகநந்தினி  ஸ்ரீ சீதையின் பிரிவால் நான் மிகுந்த துயரத்தை அனுபவிக்கிறேன். சொல்லவொண்ணா மனவேதனையில் ஆழ்த்தும் இத்துயரத்தை  நீக்குவது   எப்படி?  அனைத்து  பாபங்களையும், துக்கங்களையும்  அழித்து மகிழ்ச்சியையும், சுகத்தையும்அளிக்கக்கூடிய விரதம் ஏதாவது  உண்டென்றால், அதை அனுஷ்டிக்கும் விதிமுறையுடன் எனக்கு கூறி அருளுங்கள்."என்றார்.• மகரிஷி வசிஷ்டர்," ஸ்ரீ ராமா,மிக நல்லதொரு கேள்வி இது. நீ மேன்மை மற்றும் பவித்ரதன்மையுடன் கூடிய ஆழ்ந்த அறிவாற்றலை கொண்டவன்.உன் நாமத்தை  உச்சரித்த மாத்திரத்தில் மனிதர்கள் புண்ணியத்தைபெறுவர். இவ்வுலகத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய நல்லதொரு  கேள்வியை கேட்டுள்ளாய். உனக்கு  ஒரு ஏகாதசி விரதத்தின் மகத்துவத்தை கூறுகிறேன்.சித்திரை- வைகாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை  மோகினி ஏகாதசி என அழைப்பர். இவ்ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் மனிதர்களின் சகல   பாபங்களும்,துக்கங்களும் அழிக்கப்படுகிறது. இதன் பிரபாவத்தால் மனிதர்கள் மோகம்  என்னும்  மாயையின்  பிடியிலிருந்தும்  விடுதலை  பெறுவர்.• ஸ்ரீ ராமா! துக்கத்தால் வாழ்க்கையில்  துன்பப்படும்  அனைவரும்  இவ்  மோகினிஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கவேண்டியது அவசியமானதும். இவ் விரதத்தை மேற் கொள்வதால்  ஒருவரது பாபங்கள் அனைத்தும்  நீங்கப்  பெறுகிறது. இவ் மோகினி ஏகாதசி விரத  மஹாத்மிய கதையை கூறுகிறேன்.கவனத்துடன் கேள்.•சரஸ்வதி நதியின்  கரையில் பத்ராவதி என்னும்  பெயர் கொண்ட நகரம்  அமைந்திருந்தது. அந்நகரைத்  யூதிமான் என்னும்  பெயர் கொண்ட  அரசன் ஆட்சி புரிந்துவந்தான். அந்நகரில்  வற்றாத தனம், தான்ய சம்பத்துக்களுடன் தனபால்  என்னும் பெயர்கொண்ட ஒரு வியாபாரி வசித்து வந்தான். பகவான் மஹாவிஷ்ணுவின் பக்தனாக அவன் மிகுந்த தர்மசிந்தனையுடன்  நகரில் ஆங்காங்கே அன்னதான உணவகங்கள், குடிநீர்  பந்தல்,குளம், குட்டை,  தர்மசத்திரங்கள் ஆகியவற்றை அமைத்திருந்தான்.   பாத யாத்ரிகர்களின் நன்மைக்காக சாலையின் ருமருங்கிலும் மாமரம், நாவல்கனி  மரம், வேப்பமரம் ஆகியவற்றை நட்டு பராமரித்து வந்தான்.• வியாபாரிக்கு ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.அவர்களில் மூத்தவன் கொடிய பாப வினைகளை புரியும்பாபியாகவும், துஷ்டனாகவும் இருந்தான். அவன்துஷ்டர்களுடனும்,வேசிகளுடனும் நட்பு கொண்டு நேரத்தை வீணாக  கழித்து வந்தான். இவை தவிர கிட்டிய மீதி நேரம் அனைத்தையும் சூதாட்டத்தில் செல வழித்தான். அவன் நீசனாகவும், தெய்வம்,பித்ருக்கள்  என எவற்றின் மீதும் நம்பிக்கை இல்லாமல் வீணாக தந்தை ஈட்டும் செல்வத்தை இம்மாதிரியான  கெட்ட காரியங்களில் செலவழித்துக் கொண்டிருந்தான். மதுபானம்,புலால்  உண்பது அவனுடைய  தினசரி வாடிக்கையாக இருந்தது. அநேக முறைஅறிவுரை கூறியும் திருந்தாமல் தான் செய்வதையே  செய்துகொண்டிருந்தான். அவனது செய்கையால் துக்கத்தில் வாடிய வியாபாரி தனபால்,  அவனது சகோதரர்கள், குடும்பத்தினர் அனைவரும் அவனை  கடும்சொற்களால் நிந்தனை செய்து,வீட்டை விட்டு வெளியேற்றினர். வீட்டிலிருந்து வெளியேறியவுடன், அணிந்திருந்த விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை விற்று கிடைக்கும் பணத்தில் நாட்களை கடத்தி வந்தான். பணம் கரைந்துபோனதும் அதுவரை அவனுடன் இருந்த துஷ்ட நண்பர்களும்,வேசிகளும் அவனை விட்டு விலகிப் போயினர்.• பசியும், தாகமும் வருத்தி எடுக்க வேதனை  தாளாமல் திருடுவது  என்னும் முடிவுக்கு வந்தான். இரவு நேரங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம்  கிட்டிய வருமானத்தால் வாழ்க்கையை  நடத்தி வந்தான். ஒரு  நாள் அவன் திருடும் வேளையில், நகர காவலரிடம் கையும்,  களவுமாக பிடிபட்டான். ஆனால் வியாபாரியின் மகன்  என்று அறிந்ததும்,  அவனை தண்டியாமல் திருந்தி வாழுமாறு அறிவுரை கூறி விட்டு விட்டனர். ஆனால் சில நாட்களில் இரண்டாவது  முறையாக மீண்டும் அகப்பட்ட போது, அவன்பேச்சை  கேளாமல், அவனை இழுத்து சென்று அரசனின் முன் நிறுத்தி, நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தனர்.  அரசன் அவனை சிறையில்  அடைக்க உத்தரவிட்டான். சிறையில் அவன் தண்டனையாக சித்திரவதையை    அனுபவித்தான். பிறகு அவனை அந்நகரை  விட்டும் வெளியேற்றினர். மிகுந்த மன வருத்தத்துடன் நகரை விட்டு வெளியேறி காட்டில்  வசிக்கத் தொடங்கினான். அங்கு வாழும் பிராணிகளைக்  கொன்று தன் பசியை தணித்துக் கொண்டான். நாளடைவில் பிராணிகளை வேட்டையாடும் ஒரு  வேடுவனாக மாறி விட்டான்.  வில் அம்புகளைக் கொண்டு காட்டில் வாழும் பிராணிகளை  தன் பசிக்காக மட்டும்  அல்லாமல் விற்பதற்காகவும் கொல்லத் தொடங்கினான். ஒரு நாள் வேட்டையில்  ஏதும் சிக்காமல் போக, வேட்டையாடிய களைப்பில் பசியும்,  தாகமும் வருத்தி எடுக்க,  உணவைத் தேடிஅலைந்து அங்கும் இங்கும் அலைந்து கடைசியில் கௌடின்ய  முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். .கௌடின்ய  முனிவர் கங்கையில் நீராடி விட்டு வந்து கொண்டிருந்தார். அவரின் நனைந்த வஸ்திரத்தின் நுனியிலிருந்து  விழுந்த  நீர்துளிகள் அவன் மீது பட்டமாத்திரத்தில், பாபியான அவனுக்கு  நற் சிந்தனையும், நல்லெண்ணமும் உருவாகியது. அவன்  முனிவரின் அருகில் சென்று  இருகரம்  கூப்பி கண்ணில் நீர் மல்க "முனிசிரேஷ்டரே!, நான்  என் வாழ்க்கையில் மன்னிக்கமுடியாத அளவு பாபம் புரிந்துள்ளேன்.
என் பாப வினைகளிலிருந்து  நான்முக்தி பெறுவதற்கு ஏதாவது எளிதான, செலவில்லாமல் கடைப்பிடிக்கக் கூடிய  ஒருவழியை கூறி  அருள வேண்டும்."என்றான்.முனிவர் அதற்கு," நான்சொல்வதை கவனத்துடன் கேள்.• சித்திரை- வைகாசி மாதம்  சுக்லபட்சத்தில் வரும்  ஏகாதசி,மோகினி  ஏகாதசி  என்று அழைக்கப்படுகிறது.  அவ் மோகினி ஏகாதசி  விரதத்தை விதிப்பூர்வமாக கடைப்பிடித்தால் உன் பாபங்கள் எல்லாம் நீங்கி,புது வாழ்வு பெறுவாய் என்றுஅருளினார். முனிவரின் வார்த்தையைக் கேட்டு அவன் மிகுந்த சந்தோஷமடைந்தான்.முனிவர் கூறிய  ஏகாதசி விதிப்படி அவ் மோகினி ஏகாதசி விரதத்தை  கடைப்பிடித்தான்.• ஸ்ரீ ராமா, அவ் மோகினி ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் அவனதுஅனைத்து பாபவினைகளும் அகன்று நல்வாழ்க்கைபெற்றான்.இறுதியில் விரதத்தின்புண்ணிய பலனால்,கருடவாகனத்தில்  விஷ்ணுலோகத்தை  அடையும் பிராப்தியும்  பெற்றான். இவ் விரதத்தினால் மோகம்  என்னும் மாயை  அகன்று, மனிதர் முக்தியை பெறுகிறார்.இவ்வுலகில் இவ்விரதத்திற்கு இணையான விரதம் வேறெதுவும் இல்லை. இவ்விரதமஹாத்மிய  கதையை  கேட்பவரும்,  படிப்பவரும்,ஒராயிரம்  பசு தானம் செய்த  புண்ணியத்திற்கு  இணையான புண்ணியத்தை பெறுவர். மனிதர்கள் எப்போதும் நற் சிந்தனையுள்ள  சான்றோர்,சாதுக்கள் ஆகியோரிடம்  நட்பு கொண்டிருந்தல் வேண்டும்.நற்சிந்தனையுள்ளவர்களின் நட்பு மனிதர்களுக்கு நல்அறிவை மட்டுமல்லாது வாழ்க்கை  லட்சியத்தையும் அடைவதற்கும் உதவும். கெட்டசகவாசம்,  அதனால் விளையும் பாபவினைகள்  ஒருவரை நரகத்திற்கு மட்டுமே  இழுத்துச்செல்லும். அத்தகைய நட்பு துன்பம்  வரும் காலங்களில் கைவிட்டு விலகி விடுவதால்,அனாதையாக  தவிக்க நேரிடுகிறது.  அப்போதும் கௌடின்ய ரிஷி  போன்ற சாது,சான்றோர்கள்  ஒருவரை கைவிடாமல்  நன்மார்க்கத்தைக் கூறி  அருளுவர்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே

On 05.05.2020, செவ்வாய்க்கிழமை Parana  Time = 05:46 to 09.59. Hrs  . Chennai.

*Shree Krishnarpanamastu*

Wednesday, March 25, 2020

தன்வந்திரி ஸ்லோக - ஸ்ரீ கோபால தாசரு

Dhanvantri sloka by Gopala Dasari

Enna binnapa kelu dhanvantri dayamaadu sannavanu iva kevala
Bannabadisuva rogavannu mochane maadi chennaagi paalisuvudu karuni ||pa||

Aarogya aayushya aishvaryavembo I ee muruvidhavastugalu
Naarayanana bhajakaraadavara saadhanake purnavaagippuvu
Ghora vyabhichaara paraninde para vittaapahaaramaadida doshadi
Daridraraaguvaru muru vidhadindali kaarananu nine dushkarma pariharisuvudu hariye ||1||

Vasumatiya melinnu asura janara bahala vashavalla kaliya baadhe
Bisilinda piditavaada sasigalante shishugalu naavippevu
Asuraari ninna karunaamrutada malegaredu kushaladi paalisuvusu
Kesarinda kesaru toledante karmada pathavu asunaatha hariye poreyo swaami ||2||

Aadivyaadhigalu unmaada vibhrama naanaa baadhegaushadhavu nine
He deva ninna karakalasha sudheveredu saadhugala santaisuvi
Modabadisuvi ninna saadhisuvarige shubhodayangalanivi
Aadarisi ivage tavapaadadhyaanavanittu saadhugalolagittu modakodu sarvadaa ||3||

Anyaranu bhajisadale ninnane stutisuta ninna cihnegala dharisi
Ninnavaranenisi ninna naamoccarisi ninninda upajivisi
Anna aarogyakke alpa jivigalige innu aalpariyabeke
Ninna sankalpa bhaktara poshakanemba ghanna birudinnu uluho salaho ||4||

Ninnavarali ivage innu ratiyannukottu ninnavanendu aridu
Ninna naa praarthisida anyarige alpariye enna paalisuva doreye
Enna maatallavidu enna hiriyara maatu mannisabeku karuni
Ananta gunapurna gopaala vithala innidane paalisuvudo prabhuve ||5||